Thursday, April 25, 2024

வாளிக்குள் போட்டு வச்சுருக்கேன் !

ஒருவழியா வருஷக்கடைசிக்கு வந்துருக்கோம்.  டிசம்பர் மாசம் இங்கே நமக்குக் கோடை காலம் என்றபடியால் தோட்டத்தில் பூக்கள் வஞ்சனையில்லாமல் பூத்து நிக்குது ! 
ஆஹா.... வெய்யில் வந்தாச்சுன்னு  ரொம்பவே ஆடக்கூடாது..... அன்டார்ட்டிக்காவுக்குப் பக்கத்தில் இருப்பதால்  திடீர்னு குளிர்காத்து வந்து கொடுமைப்படுத்திட்டுப்போகும். 




 
பொதுவாவே  கோடையில் 22 டிகிரிவரைதான். அத்தி பூத்ததுபோல் 30, 31 வந்தாப் போதும், தெருவில் நாம் பார்க்கறவங்கெல்லாம் 'இண்டியன் சம்மர்'னு நம்மாண்டை சொல்லிட்டுப் போவாங்க.  இப்படிக்கூட ஒரு பெருமை இருக்கு பாருங்க. 

சுற்றுலாப்பயணிகள் கூட்டமும் கோடையில் அதிகம். பலநாடுகளில் டிசம்பர் மாசம் விடுமுறைக்காலமில்லையோ ! 

நமக்கும் கோடைகாலத்தில் வேலைகள் அதிகம்தான். தோட்டவேலையும் வீட்டுவேலைகளும் முதுகை ஒடைச்சுப்போட்டுரும்.  முக்கியமா இட்லிக்கு மாவரைப்பது! இது ஒரு வேலையான்னு  நினைக்கப்டாது.  இங்கே நம்ம வீட்டில் இட்லிக்கு மூணுநாள் வேலை.  நம்பமுடியலை இல்லை ?  முதல்நாள் ராத்ரி அரிசி ஊறப்போடணும். மறுநாள் காலையில் உளுந்து ஊறவைக்கலாம்.  ஒரு பத்துமணிக்குப் பக்கம் அரிசியை க்ரைண்டரில் போடலாம்.  எப்படியும்  மாவாட்டிமுடிக்க பதினொன்னரை ஆகிரும்.  கலந்து வைச்சால்.... மாலை ஏழுமணிக்குப்பக்கம் மாவு பொங்கி வந்தால்  அடிச்சோம் ப்ரைஸ் ! (அல்ப சந்தோஷி )

புழக்கடைக்கு ஓடிப்போய் புதினாவைக் கிள்ளிக் கொண்டுவந்து புதினா சட்னியோடு ஜமாய்ச்சுறமாட்டோமா என்ன ? 
போனா வராதுன்னுன்ற பட்டியலில் வெயில் இருப்பதால் இப்படி  ஒரு மூணு நாலு மாசங்களுக்கு  (அடுத்த எட்டுமாசத்துக்கும் சேர்த்தே)   இட்லி, தோசைன்னு வெளுத்து வாங்கிருவோம். நம்மூரில் பிரச்சனையில்லாமச் செய்யற பல வேலைகளுக்கும் இங்கே மெனெக்கெடணும். வெதர்மேன் என்ன சொல்றாரோன்னு பார்த்துட்டுத்தான் வீட்டு வேலைகளும். இப்ப இதெல்லாம் பழகிப்போச்சுன்னு வையுங்க. 

இங்கே வந்த புதுசுலே.... தயிர் தோய்க்கறதுதான் பெரும்பாடு.  உறைக்குத்திவச்ச பால் அப்படியே இருந்து நாறிப்போய், தூக்கிப்போட்ட நாட்கள்தான் அதிகம்.  நமக்குத் தயிர் இல்லாமல் சாப்பாடில்லை என்பதால் கொடுமையாக இருக்கும்.  தயிர் செஞ்சுக்கும் மெஷீன்ன்னு பலவிதமா வாங்கிப் பார்த்துருக்கேன்.  

 இப்பக் காலம் மாறிப்போச்சு.  இந்தியன் கடைகளிலும் சூப்பர் மார்கெட்டிலும் தயிர் கிடைக்க ஆரம்பிச்சதும், (அதுவும் கோபாலா ! ) மெஷினையெல்லாம் தூக்கிப்போட்டாச்.  வேலை மிச்சம்.

வருஷக்கடைசிநாள் ஞாயிறாக அமைஞ்சுபோச்சு. சண்டே மார்கெட்டை ஒரு சுத்து சுத்திட்டு வரலாமுன்னு போனோம். வழக்கத்தைவிட நல்ல கூட்டம்.  நிறைய தாற்காலிகக் கடைகள் வேற! ஒரு இடத்தில்  எனக்கான ஒன்னு !  விடமுடியலை. 

வீட்டுக்குக் கொண்டுவந்து 'ஆராய்ஞ்சு' பார்த்ததில்  சின்னதா ஒரு சேதாரம்.  நோ ஒர்ரீஸ். நம்ம ரிப்பேர்ஷாப் இருக்கே :-)
போரோபுதூர் ரிலீஃப் பேனல்.  ஜாவாத்தீவில் இருக்கும் எட்டாம் நூற்றாண்டு புத்தர் கோவில் சமாச்சாரம்.  பேனலில் நம்ம இந்திரன் !  Dewa Indra
உலகத்துலேயே பெரிய புத்தர் கோவிலாம் ! 2500 சதுரமீட்டர்  பரப்பில் 2672 பேனல்களும் 504 புத்தர் சிலைகளும் இருக்காம் !

காட்டுக்குள்ளே எரிமலை சாம்பல் குவியலுக்குள்  ஒளிஞ்சுருந்த கோவிலை ஒரு ஆயிரம் வருசங்களுக்குப் பிறகுக் கண்டுபுடிச்சுருக்காங்க !

Borobudur was constructed between about 778 and 850 ce, under the Shailendra dynasty. It was buried under volcanic ash from about 1000years  and overgrown with vegetation until discovered by the English lieutenant governor Thomas Stamford Raffles in 1814. 

நம்ம அங்கோர்வாட் போல இன்னும் பிரபலம் அடையலை போல!  எனக்கும் இதைப் பார்த்தபிறகுதான் இப்படி ஒரு சமாச்சாரம் உலகில் இருக்குன்னு தெரியவந்தது !  அவுங்க சொல்லும் அளவின்படிப் பார்த்தால்  ஒவ்வொரு பேனலும் குறைஞ்சது  ஒரு சதுரமீட்டர் அளவு இருக்கணும். சின்னச் சின்னதா செதுக்கி, அப்புறம் இணைச்சுருப்பாங்க போல !  அப்படி இணைச்ச ஒரு பகுதிதான் இதுன்னு தோணுது ! இதுலேயே ரொம்பச் சின்னதா ஆறு பகுதி இருக்கு ,பாருங்க.
நமக்குக் கிடைச்சது எதோ ம்யூஸியத்தில் இருந்ததுபோல இருக்கு. கோவிலைக் கண்டுபிடிச்சபின் 1911 புனரமைப்பு நடந்துருக்கு. அப்புறம் 1983 ஆம் வருஷமும்'. அப்போ சிலபல பலகைகளை ம்யூஸியத்தில் வச்சுருக்கலாம். அதன்பின்  சிதைஞ்ச பலகைகளை யாராவது விற்றிருக்கலாம் என்பது என் யூகம். எப்படியோ.... நம்ம கைக்கு வந்துருக்கு ! 

வலைவீசுனதில் ஏராளமான படங்களும் விவரங்களும் கிடைச்சதை என்னால் நம்பவே முடியலை ! 
அற்புதம் என்ற சொல்லைத்தவிர சொல்றதுக்கு வேறொரு சொல் தெரியலை !
இந்தோநேஷியாவில் அபூர்வ சமாச்சாரங்கள் ஏராளம் இருக்கு !  !  நாம்தான் விவரமில்லாம  பாலி மட்டும் போயிருக்கோம்..... ப்ச்.....


போரோபுதூர்னு எழுதி நம்ம வாளிக்குள் போட்டுருக்கேன் !  நம்மது பாட்டம்லெஸ் பக்கெட், கேட்டோ !!!!!










Monday, April 22, 2024

பொட்டி வந்துருச்சா ?

நம்மூர்லே முக்கியமான பண்டிகைகள்  சமயம்,  வீட்டு வேலைகளில்  நமக்கு உதவி செய்யும் பணியாளர்களுக்குப்  பரிசு கொடுப்போம்தானே ! நாங்க சின்னப்பிள்ளைகளா இருந்த காலத்தில் பண்டிகை தினத்தின்  காலையிலேயே.....  வீட்டுக்கு வந்து  வாங்கிக்குவாங்க.  அதுக்கு அப்போ பேரு  'இனாம்' 
(Pic from Google. Thanks to owner )

ஆனா..... பிரபுக்களும் சீமாட்டிகளும் வெள்ளைக்கார ஸ்டைலில் இதுக்குன்னு ஒரு நாள் ஒதுக்கி வச்சு அன்றைக்குத்தான் பரிசுப்பொருட்களை ஒரு பொட்டியில் வச்சுக் கொடுப்பாங்களாம்.  அது முதல்நாள் பண்டிகை முடிஞ்ச மறுநாள்! ஏற்கெனவே அவுங்களுடைய பெரிய பண்டிகையான க்றிஸ்மஸ்  தினத்துக்கான  விருந்துன்னு ஏகப்பட்ட கேக், பிஸ்கெட், புட்டிங், ரோஸ்ட் அது இதுன்னு சமைச்சுக் கொண்டாடி முடிச்ச  மறுநாள் நிறைய சமாச்சாரங்கள் அப்படியப்படியே மீந்து போய் இருக்குமாம். அதையெல்லாம் என்ன செய்வது ?
 
எடு அட்டைப்பொட்டிகளை ! அடுக்கு பலகாரங்களை !  கொண்டுபோய்க் கொடு அநாதை இல்லங்களுக்கு !

இப்படிச் சமையல் மொதக்கொண்டு எல்லா வேலைகளையும்  செஞ்சு முடிச்ச  , மாளிகைப் பணியாளர்களுக்குப் பரிசும் பொட்டிகளில்தான்! 
அதனால் இந்த நாளுக்கு பாக்ஸிங் டே  (Boxing Day )ன்னு பெயர்  அமைஞ்சுருக்கு ! 

நம்ம பக்கங்களில் க்றிஸ்மஸ் தினத்துக்கு மட்டும்தான் அரசு விடுமுறை.  மற்றபடி வெள்ளையர் நாடுகளில்  பாக்ஸிங் தினத்துக்கும் சேர்த்துதான்  விடுமுறை.  மேலும் வருஷக்கடைசியில் வரும் இந்தப் பண்டிகைக்கு ஏழாம்நாள் அவுங்களுக்குப் புதுவருஷத் தொடக்கம் வேற இருப்பதால்  சுமார் ரெண்டு வாரமாவது  நாடுமுழுக்க  விடுமுறைதான். 

ஒரு சுவாரஸ்யமான சேதி.....  பண்டிகை, விழா நாட்கள்,  சனி ஞாயிறாக அமைஞ்சுருச்சுன்னால்..... அடடா...வடை போச்சேன்னு வருந்த வேணாம். தொடர்ந்துவரும் திங்கள் செவ்வாய் கிழமைகள்  அரசு விடுமுறையாக இருக்கும்! 

இங்கே தென்கோளத்தில் இருக்கும் நாடுகளுக்கு இது கோடைகாலம் என்பதால்   கோடைகால விடுமுறையும் கூடச் சேர்ந்துக்குது ! 

நாங்க நியூஸி வந்த புதுசில் முதல்முறையா 'பாக்ஸிங் டே' பற்றித் தெரியவந்தது. முதலில் நான் நினைச்சேன் 'குத்துச்சண்டை'  நடக்கும் போலன்னு !  இல்லையாம்.  அன்றைக்குக் கடைகளில் முக்கால்வாசிப் பொருட்கள் நல்ல கழிவில்  கிடைக்குமாம். சிலசமயம்  50 முதல் 75 வரையிலும் கூட ! ஒரு வருஷம், ஒரு  கார் விற்பனைக் கடையில்  இப்படி ஸேல் போட்டு,  முதலில் வரும் நபருக்கு மட்டும் 90% கழிவுன்னு போட்டதும், சனம்  முதல்நாள் ராத்ரியே போய் ஷோரூம்  வெளியே வரிசை கட்டி நின்னதெல்லாம் கூட நடந்துச்சு !

ஆகக்கூடி, பொட்டிகளில் வச்சு தானம் வழங்கிய தினம், இப்ப  ஸேல் சீஸனாக்கிப் போயிருக்கு !  நம்ம அக்ஷயத்ருதியையை நினைச்சுக்குங்க.  உண்மையை விட்டுட்டு எப்படி ஆக்கி வச்சுருக்கோமுன்னு !!!!

பண்டிகைக்கான அலங்காரப்பொருட்களை வண்டிவண்டியா வாங்கி, யானைவிலையில் போட்டு  பண்டிகைக்கு முதல்நாள் வரை விற்றதுபோக , பாக்கியானதையெல்லாம்,  டிசம்பர் 26 இல்  50% கழிவுன்னு ஆரம்பிச்சு  டிசம்பர் 31 தேதியாகும்போது 90% லே வந்து நிக்கும். 

இங்கே நியூஸியில்  'அவுங்க' பண்டிகையான  குட் ஃப்ரைடே, ஈஸ்டர், க்றிஸ்மஸ்  தினங்களில் முழுக் கடையடைப்புத்தான்.  டிவியில் கூட  கமர்ஸியல் கிடையாதுன்னா  பாருங்க !  சனமும் செய்வதறியாது திகைச்சுக்கிடக்கும்.....  அதனால் மறுநாள் காலையிலேயே கடைகளில் கூட்டம் அம்முவது வாடிக்கை.

இப்படிக் கோலாகலமாக இருக்கும் பாக்ஸிங் டே நாளில் நாம் யானை பார்க்கக் கிளம்பினோம். ஊருக்குள்ளே முப்பது யானைகளை ஓட்டிவிட்டுருக்காங்க.  இது ஒரு சம்மர் ஆக்டிவிட்டின்னு சொல்லலாம். எங்கெங்கே நிக்குதுன்னு ஒரு வரைபடம்  வேற  இருக்கும். போய்ப் பார்த்துட்டு அதன்கூட ஒரு படமெடுத்து அனுப்பி வைக்கணும்.  முப்பதையும் பார்த்து முடிச்ச பிள்ளைகளுக்கு ஏதோ பரிசும் உண்டு. 

நம்மூரில் நிலநடுக்கம் ஏற்பட்டுப் பல உயிர்களைப் பறிகொடுத்து மனசொடைஞ்சு இருந்த காலத்தில், நம்மூர் சிட்டிக்கவுன்ஸில் இப்படி ஒன்னை ஆரம்பிச்சது. 'நிமிர்ந்து நில்' என்ற பெயரில்  49 பெருசு & 50 சிறுசுன்ற கணக்கில் ஒட்டைச்சிவிங்கிகளை ஊருக்குள்  அங்கங்கே வச்சதும்,  மக்கள் எல்லோரும் ஓடியோடிப்போய்ப் பார்த்ததும் எல்லாம் நம்ம துளசிதளத்துலேயே விரிவாக ஒரு பதிவில் வந்துருக்கு. அப்போப் பார்த்தது நினைவில்லைன்னால்.... இப்போப் பார்க்கலாம் இந்தச் சுட்டியில் !

https://thulasidhalam.blogspot.com/2015/02/blog-post_6.html

ரெண்டு மூணுமாசம் டிஸ்ப்ளேயில் வச்சுருந்துக் கடைசியில்  ஒரே இடத்தில் எல்லோரையும் கூட்டியாந்து வச்சு, ஏலம் விட்டு, அதில் கிடைக்கும் தொகையை ஒரு தருமக் காரியத்துக்குக் கொடுப்பது வழக்கம் !  பெரிய பெரிய வியாபார நிறுவனங்கள் இதை ஏலத்தில் எடுத்து அவுங்க அலுவலகத்தில் காட்சிப்பொருளா வச்சுருக்காங்க. பெருமைக்குப் பெருமை, தருமத்துக்குத் தருமம்!

https://www.facebook.com/media/set/?set=a.10203739811678337&type=3

 அப்புறம் ஒரு அஞ்சாறு வருஷம் கழிச்சு 50 பெருசு, 5 சின்னதுன்னு பெங்குவின் பறவைகள் !

இப்போ  30 யானைகள். யானைக்குப் பெயரும் வச்சாச். எல்மெர் !  இந்த முறை மூளைக்காயத்துக்கு உதவி.   Laura Fergusson Brain Injury Trust 




நேத்து  நியூஸி க்றிஸ்மஸ் மரம் பார்க்கப் பீச் வரை போனப்ப வண்ணத்துப்பூச்சி யானையை தரிசனம் செஞ்சாச் ! இன்றைக்கு  நகரமையத்துக்கு வந்துருக்கோம்.

இப்பெல்லாம் எதுக்கெடுத்தாலும் ஆப் னு ஆப்பு வச்சுடறாங்க.  நம்ம மொபைல்ஃபோனில் அதை இறக்கினாலும் சரியா ஒன்னும் தெரியலை.  எந்தத் தெருன்னு குறிப்பிட்டு இருந்தால் சுலபம்.  நாம்தான் தேடிக்கிட்டு ஓடவேண்டியிருக்கு. ப்ச்.....

நகரமையத்துலே  அங்கங்கே  கொஞ்சம் க்றிஸ்மஸ் அலங்காரங்களையும் வேடிக்கை பார்த்துக்கிட்டே... யானைகளைத் தேடிப்போறோம்.  ஒரு பத்து யானைகள் கிடைச்சதும்,  நேரமாகுதுன்னு வீடு திரும்பினோம்.  இன்னொரு நாள் கிளம்பி வேற பேட்டைகளுக்குப் போகணும். ஆனால்..... நேரம் சரியா அமையலை. 









கடைசியில் ஏலம் விடுமுன் போய் எல்லோரையும் ஒரே இடத்தில் பார்க்கணுமுன்னு நினைச்சதும் நடக்கலை.....
யானைக்காரியின் நிலையைப் பார்த்தீங்களா ?  ப்ச்.....  

Thursday, April 11, 2024

விளக்கலங்காரம் நம்மூரில் !

ஒரு மூணு வாரமா நடந்துக்கிட்டு இருக்கும் கொண்டாட்டத்தைப் போய்ப் பார்க்க இப்பதான் நமக்கு நேரம் கிடைச்சுருக்கு !
நம்ம பக்கத்துப்பேட்டைதான் ! அஞ்சு கிமீவுக்கும் குறைவான தூரம். பத்து நிமிட்லே போயிறலாம்.  இன்னும் இருட்டலையே.....  அவுங்களே ராத்ரி எட்டரைக்குத்தான்  விளக்கேத்தறாங்க. ராத்ரி பத்தரைக்கு லைட்ஸ் ஆஃப்.  மணி ஒன்பதைத் தாண்டிருச்சேன்னு கிளம்பிப்போறோம்.

இந்த  அலங்காரம் ஆரம்பிச்சு இது அஞ்சாவது  வருஷம்.  நாலு லக்ஷம்  LED lights னு சொல்றாங்க. எண்ணிப்பார்க்க யாராலெ முடியும் ? :-) டிசம்பர் ஒன்னு முதல் ஜனவரி ஒன்னுவரை இருக்கும்.  இந்த வருஷம் (2024)நவம்பர் முப்பதுக்கு ஆரம்பிக்கப் போறாங்களாம். இப்பவே சொல்லிட்டாங்க. இன்னும் பெருசா இருக்குமாம் ! ஒருவேளை எட்டு லக்ஷமோ?   

இதுக்குன்னே ஒரு வலைப்பக்கம் வேற வச்சுருக்காங்க.  'நாட் இனஃப் லைட்ஸ்' னு பெயர். பாருங்க, நாலு லக்ஷம் போதலையாமே!!!! 

   http://www.notenoughlights.co.nz/

Cul de Sac லே  இந்த  ஷோ நடப்பதால்  பொதுவா வண்டிகள் போக்குவரத்து கிடையாது. ஷோ நடக்கும் நேரம், அந்தப்பகுதியில் இருக்கும் வீட்டுமக்களும் ஒத்துழைப்பதால்  அவுங்க வீட்டு வண்டி நடமாட்டங்களும் கிடையாது.  வேடிக்கை பார்க்கும் நாம்தான்  அடுத்துள்ள தெருவில் வண்டியை நிறுத்திட்டு நடந்து போகணும். போகட்டும், ஒரு ரெண்டு நிமிட் நடையில் நாமென்ன குறைஞ்சு போறோம் ? 

https://www.facebook.com/1309695969/videos/322881160657786/

இந்த வீட்டுக்கு எதிர்ப்பக்கம் இருக்கும் இன்னொரு வீட்டிலும் விளக்கு அலங்காரம் செஞ்சுருக்காங்க. 

இந்தப்பதிவை எழுதும்போதுதான் இது சம்பந்தப்பட்ட வீடியோ க்ளிப் கண்ணில் பட்டது. உடனே ஃபேஸ்புக்கில் போட்டுருக்கேன். 
அதன் சுட்டி இதோ !

https://www.facebook.com/1309695969/videos/1186434079400386/

இலவச அனுமதின்னாலும்..... எவ்ளோ வேலை செஞ்சுருக்காங்கன்னு பார்த்தால்  மலைப்புதான்!  அதுக்காகவே  அங்கிருக்கும் உண்டியலில் நம் வகையில் கொஞ்சம் போடத்தான் வேணும். அப்படியே ஆச்சு ! 



வீடுவந்து சேர்ந்தால் 'நம்மவன்'  வாசப்பக்கம் போய்ப் பார்த்தான்.  இவனுக்கு அந்த லைட் ஷோ பார்க்கக் கொடுத்துவைக்கலை..... அதுக்காக அப்படியே விடமுடியுமா ?
இப்படித்தாண்டா இருந்ததுன்னு 'கோடி' காமிச்சோம் :-)