Thursday, April 07, 2005

விசேஷ நாள்!!!!

ஆடி கழிஞ்ச அஞ்சாம் நாள் தொடர்ச்சி!!! பாகம் 8

ஹோலிப் பண்டிகை, பங்குனி உத்திரம், புனித வெள்ளின்னு மூணு பண்டிகையும் சேர்ந்து இருக்கு இன்னைக்கு!
வழக்கம் போல கோவிலுக்குப் போய்ச் சேர்ந்தேன். பிரகாரத்தைச் சுத்திக்கிட்டு அப்படியே ஆண்டாள் சந்நிதிக்கு
வந்து, கம்பிக்கதவுக்குப் பின்னாலெ இருக்கற 'சூடிக் கொடுத்த சுடர்க்கொடி'யைப் பார்க்கறேன். ஒரு வித்தியாசம்
இருக்கே! இன்னும் உத்துப் பார்க்கும்போது தெரியுது என்ன மிஸ்ஸிங்குன்னு! இடதுபக்கம் போட்ட கொண்டையை
வழக்கமா மூடி இருக்கும் தங்கக் கவசம் இன்னைக்குப் போட்டுக்கலை!!



அப்பத்தான் நினைவுக்கு வந்தது, நேத்து 'ஸ்ரீ ஆண்டாள் திருக்கல்யாணம்'னு கோயில் நோட்டீஸ்போர்டுலே
படிச்சது.ஆழ்வார்கள் கூட்டத்திலே இருக்கும் ஒரே பெண்! அஞ்சாப்புப் படிக்கையிலே ஸ்கூல் நாடகத்துலே
ச்சின்ன வயசு ஆண்டாளா வேஷம் போட்டு நடிச்சது, திருப்பாவை போட்டியிலே கலந்துக்கிட்டு முதல் பரிசு
வாங்குனது எல்லாம் மனசுக்குள்ளே வந்து போகுது. அப்பெல்லாம் ஃபோட்டோ எடுத்துக்கறதுன்னா ஸ்டுடியோ
வுக்குத்தான் போகணும். இப்ப கண்ட நேரத்துலே, தோணறப்ப 'க்ளிக்' செஞ்சுடறமே, அதெல்லாம் இல்லாத
காலம்! தகர டப்பா மாதிரி இருக்கற பாக்ஸ் கேமரா, அதுவும் கலர் ஃபிலிம் கிடையாது. என்னதான் அழகா
உடுத்திக்கிட்டு நின்னாலும், அழுதுவடியுற மாதிரி இருப்போம் அந்த ஃபோட்டோலே!!! அந்த டப்பாவே கூட
வாங்கிக்க முடியாத நிலமை! அதெல்லாம் மேல்தட்டுவாசிகளுக்குன்னே இருந்துச்சு!!!! அதனாலே நடந்தது
எல்லாமே நினைவுகளாவே மனசுலே பதிஞ்சு வச்சாச்சு.

மத்தியானமா 2 மணிக்கு நம்ம 'சித்ரா ரமேஷ்' வீட்டுக்குப் போறோம். நேத்தே இந்த சந்திப்பை ஏற்பாடு
செஞ்சாச்சு.நம்ம இணைய நண்பர்கள் சந்திப்புலே அவுங்களுக்குக் கலந்துக்க முடியாமப் போச்சு! வெளியூருக்குப்
போயிருந்தாங்க!

ஒருதடவை, 'திண்ணை'யிலே 'உக்காந்து' படிச்சுக்கிட்டு இருந்தப்பத் தற்செயலா அவுங்களோட கட்டுரை ஒண்ணைப்
படிச்சேன். எனக்கு ரொம்பவெ பிடிச்சுப் போச்சு. அப்புறம் அவுங்க எழுதுன தொடர் முழுசும் தேடிப் பிடிச்சுப்
படிச்சது முதலெ அவுங்களொட 'விசிறி' யாகிட்டேன். எங்களைப் பகல் சாப்பாட்டுக்கே வரச்சொல்லிடாங்க!!( மதி
கவனிக்க!) நாந்தான், மகளோட ப்ளான் என்னன்னு தெரியாம 'கமிட்' செஞ்சுக்க வேணாமுன்னு, சாப்பாடெல்லாம்
வேணாங்க, நாங்க ஒரு ரெண்டு மணிபோல வரோமுன்னு சொல்லிட்டேன்.

இன்னைக்குன்னு பார்த்து மகள் வெளியே கிளம்பத் தயாராகவே நேரமாயிருச்சு. நேத்து ராத்திரி முஸ்தாஃபாவுக்கு
ஷாப்பிங் போயிட்டு லேட்டாத்தான் வந்தா! பக்கத்து பில்டிங்லேதான் நாம் தங்கியிருந்தோம் என்றதாலே பிரச்சனை
இல்லே! சிராங்கூன் ரோடுலே இருக்கற வீரமா காளியம்மன் கோயிலுக்குப் பக்கத்துலே இருக்கற மதிள் சுவரை ஒட்டி
இருந்த இடத்துலே ஒரு ச்சின்னக் கூட்டம் இருந்துச்சு! என்ன நடக்குதுன்னு தெரிஞ்சிக்காட்டா, எனக்குத் தலை
வெடிச்சுடாதா? அதுலே நுழைஞ்சு பார்த்தேன். பங்குனி உத்திரம் ஆச்சே! வேண்டுதல் போல! ஒருத்தருக்கு
அலகு குத்திக்கிட்டு இருந்தங்க! நெத்தியிலே ச்சின்னக் கம்பியாலே குத்தியிருந்த தங்கக்கொடி வெய்யிலிலே மின்னுது!
கொஞ்சம் தடியான கம்பிங்களை அவரோட உடம்புலே குத்தி ஏத்திக்கிட்டு இருக்காங்க. ரொம்ப வலிக்குமோ?அவரோ
ரெண்டு பக்கத்திலேயும் அவரைத்தாங்கிப் பிடிச்சுக்கிட்டு இருந்தவங்க தோளிலே கைகளைப் போட்டுக்கிட்டு ஒருவித
மயக்க நிலையிலே இருக்கறவர்போல நிக்கறார்!

என் மகளுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை! அவ தன்னை ஒரு atheist ன்னு சொல்லிக்குவா.நானும் அதைப்
பத்தி ஒண்ணும் சொல்றது இல்லை! 'கடவுள்'னு ஒரு விஷயம் இருக்கறதை அவுங்கவுங்க உணரணும். எதுவுமே
ஒரு நம்பிக்கைதான்! ஒரு கல்லையும் 'நம்புனாத்தான் அது தெய்வம். இல்லேன்னா அது வெறும் கல்தான்! ச்சின்ன
வயசு ஆளுங்களுக்கு நாஸ்திக உணர்வு வர்றது சகஜம்தான். நாளாக ஆக அவுங்களுக்குள்ளெ ஒரு மாற்றம் வந்து
கடவுள் என்ற சக்தியை உணருவாங்க. அதுக்குன்னு ஒரு நேரம் வரும் என்ற நம்பிக்கை எனக்கு நிறைய இருக்கு!
தானாக் கனியற கனியை எதுக்குத் தடியாலெ அடிச்சுக் கனிய வைக்கணும்?

சில சமயம், இதைப் பத்தி பேச்சு வர்றப்ப, 'நீங்க சொல்ற சாமி, உங்களுக்குத்தான் நல்லது செய்யுது. எனக்கு ஒண்ணுமே
செய்யறதில்லை'ன்னு ச்சின்னப்பிள்ளைத்தனமாச் சொல்வா.இப்படிப் பட்டவளுக்கு, அங்கே நடந்துக்கிட்டு இருந்த சம்பிரதாயமான
வழிபாடு முறைகள் எரிச்சலையும், கோபத்தையும் உண்டுபண்ணிச்சு! வெய்யிலோ ச்சுள்ளுன்னு அடிக்குது. நேரம் 11 மணியைத்
தாண்டிடுச்சு! வெய்யிலிலே நிக்கற எல்லோருக்கும் குடிதண்ணீர் பாட்டிலை ஒரு அம்மா கொண்டுவந்து விநியோகம்
செஞ்சாங்க. நிறைய மயிலிறகுகளுடன் அலங்கரிச்ச ஒரு பீடத்துக்கு முன்னே பலவகை நிறங்களிலே உணவுப்
பொருட்களை வச்சுப் படைச்சிருந்தாங்க! அதும்மேலே ஈ மொய்க்காம இருக்க ப்ளாஸ்டிக் ஷீட் போட்டு வச்சிருந்தாங்க. இது எனக்கு
ரொம்பப் பிடிச்சது! ப்ளாஸ்டிக் கெடுதல்தான். ஆனா சாப்பிடற சாமான்லே ஈ வந்து உக்காந்தா அதைவிடக் கெடுதலாச்சே!

அதுக்கப்பறமும் மகள் அங்கே பொறுமையா நிக்க மாட்டானு இருந்த நிலையாலெ நாங்க அங்கிருந்து நகர்ந்துட்டோம்!
காலையிலே இருந்து இன்னும் ஒண்ணும் சாப்பிடலை. இனித் தாங்காதுன்னு எதுத்தாப்புலே இருந்த 'கோமளவிலாஸ்'
போனோம். கீழே ஒரே கூட்டம். லீவு நாளாச்சே! அதனாலே மேலே இருந்த 'டைனிங் ஹால்'க்கு போயிட்டோம்.

சாப்பாடே ரெடியா இருக்குன்னு தெரிஞ்சது. நானும் ரெண்டுநாளா என்னென்னவோ விழுங்கிக்கிட்டு இருக்கேன்.
சோறில்லைன்னா சரிப்படாதுன்னு எனக்குச் சாப்பாடே சொல்லிட்டேன். மகளுக்கு வேணாமாம். அவ ஒரு
பரோட்டாப் பிரியை'! கூடவே வடையையும் சொல்லிட்டோம். எனக்கு வடை பாயசத்தோட சாப்பாடு!!!!
திருப்தியாச் சாப்பிட்டு, கூடவே நல்ல ஸ்ட்ராங்கான ஃபில்டர் காஃபியும் குடிச்சுட்டுக் கிளம்பினோம். அப்ப நம்ம
நண்பர் முத்து( சப்ளையர்) வந்து, 'என்னங்க, ப்ரேக்ஃபாஸ்ட்க்கு வரலையேன்னு பார்த்தேன்'னாரு. இன்னைக்கு
'ப்ரேக்ஃபாஸ்ட்க்கு லீவு விட்டாச்சு'ன்னு சொன்னேன்!!!

அங்கே இங்கேன்னு கொஞ்சம் சுத்திட்டு, சித்ராவோட வீட்டுக்குக் கிளம்பிட்டோம். நம்ம டாக்ஸி ட்ரைவர் அந்தப் பக்கம்
இதுவரை போனதில்லையாம்.நான் சொன்னேன், 'ஒரு டாக்ஸி ட்ரைவருக்கு எந்தெந்த ஏரியா எங்கே வருதுன்ற ஒரு விவரம்
கட்டாயம் தெரிஞ்சிருக்கணுமே'ன்னு. இதே போலத்தான் இன்னும் சிலபேரு சில இடங்களுக்கு நாம போறப்பச்
சொல்லிக்கிட்டு இருந்தாங்க!!!! ஒருவழியாக் கண்டுபிடிச்சுப் போய்ச் சேர்ந்தோம். அங்கெ நமக்காக 'ஃபில்டர்
காஃபி' காத்துக்கிட்டு இருந்தாரு!!!!! அட!!! நம்ம எம்.கே.குமார் தம்பி!!!!

சித்ரா, ரொம்ப நாளாப் பழகுன ஒரு ஃபிரெண்டுபோல இருந்தாங்க!!! கலகலப்பாப் பேசுனாங்க. எங்களுக்காகக்
காத்துக்கிட்டு இருக்காங்க சாப்புடாம!!!! குமாரும், ரமேஷும், பிள்ளைங்களும் சாப்ட்டாச்சு. உங்களுக்குத்தான்
வெயிட் பண்றென்.வாங்க சாப்பிடலாமுன்னு தட்டெல்லாம் ரெடியா எடுத்து வச்சிருக்காங்க! எனக்கு ஒரே குற்ற
உணர்வாப் போச்சு! 'ஏங்க, நாங்கதான் சாப்பாட்டுக்கப்புறம் வரோம்'னு சொல்லியிருந்தோமேன்னு கொஞ்சம்
அசடு வழிஞ்சேன். எங்களுக்குச் சக்கரைப் பொங்கலும், மசால்வடையும் கொடுத்தாங்க. தென்னிந்தியச் சாப்பாடுதான்,
கூட்டு, கறி, சாம்பாருன்னு வச்சிருந்தேன்னு சொல்லிக்கிட்டே அவுங்க சாப்பிட்டு முடிச்சாங்க!( அடுத்தமுறை கூப்பிட்டா
ரொம்ப பிகு பண்ணிக்காம போயிரணும்!!!!)

குமாருக்கு 'ட்வைலைட் ஷிஃப்ட்'ன்றதாலெ கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருந்துட்டுக் கிளம்பிப் போனார். அப்ப அங்கே
எனக்கொரு ·போன் வருது! யாருன்னு பார்த்தா நம்ம ரமேஷ்( மனஸாஜென்)!!! அக்கா அக்கான்னு பிரியமாப்
பேசுனார். வீட்டுக்கு வரலையேன்னு ஆதங்கமாக் கேட்டார். அவுங்க வீட்டம்மாவுக்கு இப்ப டெலிவரி டைம்! மழை
பெய்யற நேரமும், குழந்தை பெத்துக்கற நேரமும் மஹாதேவனுக்குத்( இவர் சாமிங்க... கடவுள்!!!)தான் தெரியுமுன்னு
ஒரு பழஞ்சொல் இருக்கே! 'நல்லபடியா குழந்தை பிறக்கட்டும். நல்லா இருங்க. நான் அடுத்தமுறை கட்டாயமா
உங்க வீட்டுக்கு வாரேன்'ன்னு சொன்னேன். இந்தமாதிரி பிரியமான ஆட்களோட பழகற வாய்ப்புக் கிடைச்சது ஒரு
அதிர்ஷ்டம்தானே!!!! இந்த நட்பு வட்டத்தைக் கொடுத்த இணையத்துக்கும், எல்லாத் தமிழ் வலைப்பதிவாளர்களையும்
தன்னுடைய தமிழ்மணத்தாலே கட்டிப்போட்ட நம்ம காசிக்கும் எப்படி நன்றி சொல்றது?

ரமேஷ¤ம், சித்ராவும் செம ஜாலியான ஆளுங்க.ஒரு விதத்துலே நானும், கோபாலும் போலவே! இதைநான் அங்கேயே
உணர்ந்தேன்.திரும்பி வர்ற வழியிலே மகளும் அதையே சொன்னாள்,'தே ஆர் ஜஸ்ட் லைக் யூ அண்ட் டாட்'!!!!
நல்லாச் 'சிரிச்சுப் பேசி, பேசிச் சிரிச்சு'ன்னு நேரம் போச்சு!!!!

'நாளைக்கு இதே நேரம் ஏர்ப்போர்ட்டுக்குப் போகணும். எண்ணி 25 மணி நேரம்தான் இருக்கு. இன்னும் ஏதாவது
வாங்கிக்கணுமுன்னா, ரொம்ப யோசனை செய்யாம வாங்கிக்கோ'ன்னு மககிட்டே சொல்லிக்கிட்டேத் திரும்பி வந்தோம்.
ரொம்பவே பார்த்துப் பார்த்து செலக்ட் செய்யற ஆளாச்சே!!! நானும்கூட ஏதாவது வாங்கறதா இருந்தா.... மறக்காம
வாங்கிக்கணும்.

எட்டுமணிவாக்குலே மறுபடி ஒரு நடை, நம்ம சிராங்கூன் ரோடுலே! வழியெல்லாம் ஒரே சினிமாப்பாட்டு முழங்குது!
தமிழ், ஹிந்தி, தமிழ்ன்னு மாறி மாறி!!! இதே தெருவிலே காலையிலே கடைங்க திறக்கறப்ப வந்தா, ஒரே பக்தி மயம்!!!
கடைக்குக்கடை சாமிப் பாட்டு! அவுங்கவுங்க மதம் சார்ந்த பாட்டுங்க!!!! கேக்க நல்லாத்தான் இருக்கு ஆனா, சத்தம்
ரொம்பவே ஜாஸ்தி!!!! கொஞ்சம் மெதுவா வைச்சா இன்னும் நல்லா இருக்கும்!!! நாமோ சிலநாள் விருந்தாளிங்க.
ஆனா அங்கே கடைங்களிலே வேலை செய்யறவங்களுக்குச் சீக்கிரமே காது.... போயிரும்(-

ஒரு விசிடிக் கடைக்குள்ளே நுழைஞ்சோம். பழைய படங்கள் எல்லாம் புதுசா வந்திருக்குன்னு சொன்னாங்க!நாங்க
தமிழ்நாட்டைவிட்டு முப்பத்திரெண்டு வருசமாகுது. இப்ப நாலுவருசமா நாமே வீடியோ க்ளப் வச்சிருக்கறதாலே
எல்லா(!)சினிமாவையும் நல்லது, பரவாயில்லை, குப்பைன்னு ஒண்ணுவிடாம பாக்கக் கிடைச்சிருது.நடுவுலே
28 வருசமாப் பாக்கணுமுன்னு ஆசைப்பட்டு, விட்டுப் போன படங்களையெல்லாம் சந்தர்ப்பம் வாய்க்கறப்ப வாங்கிப்
பாத்துறணும்,இல்லையா? அதுவும் 'கமல்' படமுன்னா மகளும் பார்ப்பாள்! அப்படியே அந்த ஷெல்பைப் பார்த்துக்கிட்டு
இருக்கேன், ஆஆஆ.... கிடைச்சிருச்சு! நிழல் நிஜமாகிறது! இந்தப் படத்தைத்தான் 1978லே கோபால் ஜாம்ஷெட்பூர்
போயிருந்தப்ப அங்கே தமிழ்ச் சங்க விழாவுலே போட்டாங்கன்னு பார்த்துட்டு வந்தார். என்னை விட்டுட்டு எப்படிப்
படம் பார்க்கப் போச்சுன்னு அநியாயத்துக்கு அப்பச் சண்டை போட்டேன்!

நான் ஞாபக சக்தியிலே யானை மாதிரி! மறக்கவே மாட்டேன். அதுவும் கெட்ட விஷயம், என்னைப் பாதிச்சதுன்னா
அவ்வளோதான்!

அந்தக் கடைக்காரரும், 'இந்தப் படத்துலேதானெ இலக்கணம் மாறுதோ பாட்டு வருது?'ன்னதுக்குப் பாடியே காமிச்சார்.
நல்ல குரல்வளம். அருமையாப் பாடினார். அங்கெ இருந்த கடைக்காரப் பொண்ணும் பாடுனாங்க. அவுங்க குரலும்
நல்லா இருந்துச்சு. அதைவிட அவுங்களோட ஞாபக சக்தி... அடடா... இந்த வருசம், இவரோட டைரக்ஷன்னு
அப்படின்னு கோடி காட்டுனவுடனே படங்க பேருங்களை அப்படியே கடகடன்னு ஒப்பிக்கறாங்க! அடேயப்பா....

நானும் கூடவே சேர்ந்து பாடிக்கிட்டு, ரெண்டே ரெண்டு படங்கள் வாங்குனேன். மற்றது 'நிழல்கள்'






2 comments:

said...

"....எட்டுமணிவாக்குலே மறுபடி ஒரு நடை, நம்ம சிராங்கூன் ரோடுலே! வழியெல்லாம் ஒரே சினிமாப்பாட்டு முழங்குது!
தமிழ், ஹிந்தி, தமிழ்ன்னு மாறி மாறி!!! இதே தெருவிலே காலையிலே கடைங்க திறக்கறப்ப வந்தா, ஒரே பக்தி மயம்!!!......."

இது ரொம்ப சரி. நீங்க சொன்னப்புறம்தான் கொஞ்சம் flash -back லே போய் ரசிச்சேன் :-)

".....நான் ஞாபக சக்தியிலே யானை மாதிரி! மறக்கவே மாட்டேன்....."

அட, அதான் பதிவுலே இப்படி யானைக் கூட்டமா? :-)

said...

//என் மகளுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை! அவ தன்னை ஒரு atheist ன்னு சொல்லிக்குவா.நானும் அதைப்
பத்தி ஒண்ணும் சொல்றது இல்லை! 'கடவுள்'னு ஒரு விஷயம் இருக்கறதை அவுங்கவுங்க உணரணும். எதுவுமே
ஒரு நம்பிக்கைதான்! ஒரு கல்லையும் 'நம்புனாத்தான் அது தெய்வம். இல்லேன்னா அது வெறும் கல்தான்! ச்சின்ன
வயசு ஆளுங்களுக்கு நாஸ்திக உணர்வு வர்றது சகஜம்தான். நாளாக ஆக அவுங்களுக்குள்ளெ ஒரு மாற்றம் வந்து
கடவுள் என்ற சக்தியை உணருவாங்க. அதுக்குன்னு ஒரு நேரம் வரும் என்ற நம்பிக்கை எனக்கு நிறைய இருக்கு!
தானாக் கனியற கனியை எதுக்குத் தடியாலெ அடிச்சுக் கனிய வைக்கணும்?//

என் பெரிய பெண் , உங்க மகளை போல தான் திடீர்னு வெளியூருக்கு படிக்க போனதும் கடவுள் நம்பிக்கை இல்ல அது இதுனு பேசறா ..... நீங்க சொல்றது போல நானும் wait பண்றேன் துளசி .....பாக்கலாம் ....