Monday, May 23, 2005

ஜனவரி ஒரு ஓர்ம!!!!

சனிக்கிழமையன்னிக்கு ஒரு மலையாளப்படம் கிடைச்சது. மோஹன்லால் நடிச்சதுன்னு சொல்லிக் குடுத்தாங்க.
எப்ப வந்த படம், என்னன்னு ரிவ்யூ இருக்குன்னு பாத்துறலாமுன்னு வலையிலே தேடிக்கிட்டு இருந்தேன்.
அப்பத்தான் தற்செயலா கவனிச்சேன், மோஹன்லாலுக்கு அன்னைக்குப் பிறந்தநாள்ன்றதை!! சரியா 45 வயசாகுது!
நல்லா இருக்கட்டுமுன்னு மனசுலே வாழ்த்திட்டு, இந்தப் படம் வெளிவந்த வருசத்தைப் பார்த்தேன். 1987ன்னு
சொல்லுச்சு! படத்தைப் பார்த்து முடிச்சேன்.


நல்ல படம்தான்! மோஹன்லாலோட நடிப்பு ரொம்ப நல்லா இருந்துச்சு! நடிப்புன்னா, இப்ப வர்றது போல இல்லே!
ரொம்ப சீதா சாதா( ஹிந்தி)! இயல்பான நடிப்பு! போலீஸுக்குப் பயந்த சாதாரண மனிதன். கொடைக்கனலிலே
அனாதரைஸ்டு கைடு!!! வயித்துப் பிழைப்புக்காக கைடு வேலை, கைரேகை பார்க்கற( உண்மையா, ரேகை பார்க்கத்
தெரியாதுன்றது வேற விஷயம்!)மனுஷன்னு இருக்கற அனாதை வாலிபன்.

ச்சின்ன வயசு, ஒல்லியான உருவம், போலீஸ் இன்ஸ்பெக்டரைப் பார்த்துட்டு ஓடி ஒளியற விதம் எல்லாம் நல்லா
இருந்துச்சு! இந்தப் படத்துலே சுரேஷ் கோபி, ஜகதி ஸ்ரீகுமார், ரோஹிணி, கார்த்திகா, லாலு அலெக்ஸ், ஜயபாரதி,
சோமன்னு நிறைய பேர் இருக்காங்க.

'மங்கலஸ்ஸேரி நீலகண்டன்'னு வா தோராம பறயுன்ன டயலாக் எல்லாம் கிடையாது! அவுங்கவுங்க ரோலை
அவுங்கவுங்க சரியாப் பண்ணியிருந்தாங்க!!!! நல்ல படம் பார்த்த திருப்தி!!!!

இதெப்பத்தி ஒரு பதிவு போடலாமான்னு நினைச்சுக்கிட்டு இருந்தப்பத்தான், இன்னைக்குக் காலையிலே நம்ம
முத்துவோட நவீன பாமரர்களைப் பத்தின பதிவும், நம்ம உஷாவோட தோழியர் பதிவுலே நடிக, நடிகையரின்
தலைக்குப் பின்னாலே சுத்தற ஒளிவட்டத்தைப் பத்தியும் படிச்சேன்.

இவுங்க ரெண்டு பேரும் சொன்னது ரொம்பச் சரி!!!! ஒரு நடிகனை, இயல்பா நடிக்க விடாம 'பஞ்ச் டயலாகும்,
கொஞ்சம்கூட உண்மைக்குப் பக்கம் வந்துராத சண்டைகளுமா (கிராஃபிக் உபயத்தோடு நடக்கற) இருக்கற
'சதிக் குழி'க்குள்ளே தள்ளிவிடறது ஜனங்களா? எதுக்கெடுத்தாலும் மக்கள் விரும்பறாங்கன்னு சொல்றாங்களே,
நிஜமாவே மக்கள் நடிகனைப் பார்த்து, 'நீங்க இந்தமாதிரி யதார்த்தமே இல்லாத சண்டைக் காட்சிகளிலே பறந்து
பறந்து அடிக்கணும், எல்லோருக்கும் அடி விழணுமே தவிர உங்கமேலே ஒரு துரும்பு விழுந்த அடையாளமே
இருக்கக்கூடாது'ன்னு சொல்றாங்களா? அப்படிச் சொல்ற மக்களை இதுவரை யாராவது பார்த்திருக்கீங்களா?

'காதல்'ன்னு ஒரு படம் நல்ல படம்னு பலரும் பாராட்டி எழுதுனாங்களே, எதனாலே? யதார்த்தமான கதை,
நடிப்புன்றதாலேதானே?

போதாக்குறைக்குப் பொன்னம்மான்னு 'பாடல் ஆசிரியர்கள்(!) கூட்டம்' ஒண்ணு கதைக்குச் சம்பந்தமே இல்லாம
இந்திரன், சந்திரன்னு புகழ்ந்து தள்ளி எழுதற பாட்டுங்க வேற! 'தனி மனுஷத் துதி'ங்கதான் பல பாடல்களும்!

நல்லா நடிக்கிற நடிகர்களை, இப்படித் தேவையில்லாம ஒரு 'பந்தா'க்குள்ளே நுழைச்சுப் படுகுழியிலே தள்ளிவிடற
வசன கர்த்தாக்கள்(!), கொஞ்சம்கூட இந்த சதி வேலைகளைப் பத்தித் தெரிஞ்சுக்காமல் இதுலேயே மூழ்கிப் போய்,
நிஜமாவே தனக்கு இந்த அபூர்வ சக்திகள்(!) இருக்கறதாகக் கற்பனை செஞ்சுக்கற நடிகர்கள்ன்னு ஒண்ணு மாத்தி
ஒண்ணுன்னு போய்கிட்டே இருக்கே, இதுக்கெல்லாம் என்னதான் முடிவு?

இந்த அழகுலே சக நடிகர்களை எதிரியா நினைச்சுக்கிட்டு, அவுங்களுக்கு படத்தோட டயலாக்லேயே வெல்லு விளி
வேற! போதுண்டா சாமி!!!!!




3 comments:

said...

துளசியக்கா,
மலையாளத்துல தமிழ் அளவுக்கு ஹீரோயிசம் இன்னும் வளரலன்னுதான் நினைக்கிறேன்.

said...

ட்டீச்சர்
அப்பல்லாம் ரொம்ப நல்லாவே எழுதியிருக்கீங்க

said...

வாங்க சிஜி.

//அப்பல்லாம் ......//

உ.கு. வா?