Wednesday, April 25, 2007

ஆஸ்தராலியா நியூஸிலாந்து தினம்


இது ஒரு மீள் பதிவு.

Australia NewZealand Army Corps Day.

ஒவ்வொரு வருசமும் ஏப்ரல் மாசம் 25 ஆம் தேதி இந்த தினத்தை இங்கே நியூஸிலாந்துலே அனுஷ்டிக்கிறோம். தலைப்பே உங்களுக்கு விஷயத்தைச் சொல்லிடும்.ஆனாலும் அப்படியே விட்டுட்டா நான் 'துளசி'யா இருக்க முடியுமா?


உங்க பள்ளி நாட்களிலே அசோகரின் காலம், பொற்காலம் என்று ஏன் கூறப்படுகிறது என்ற கேள்விக் கட்டாயமா எல்லோருக்கும் ஒருமுறையாவது பரீட்சையில் கேக்கப் பட்டிருக்குமே!
இல்லைன்றவங்க கை தூக்குங்க! இதெல்லாம் ஹிஸ்டரிங்க!!!



1915லே உலக மஹா யுத்தம் நடந்ததுன்னு அநேகமா எல்லோரும் சரித்திரப் பாடத்தில் படிச்சிருப்பீங்கதானே! இது முதல் யுத்தம்!
யுத்தம் மஹா மும்முரமா நடந்துக்கிட்டு இருக்கு. பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்கு ஒத்தாசையா இருக்கறதுக்காக நியூஸிலாந்து, ஆஸ்தராலியாவிலிருந்து ராணுவ உதவியாக போர்வீரர்கள் போறாங்க.என்ன இருந்தாலும் தாய்நாட்டுப் பாச உணர்வு போகாதில்லையா?அங்கிருந்து வந்தவங்கதானே இவுங்க!
இப்ப இந்த நாடுகளிலே அரசாங்கம் சுயேச்சையா நடந்துக்கிட்டு இருந்தாலும், இங்கே நாட்டு அதிபர், முதல் குடிமகன்( ப்ரெஸிடெண்ட்) கிடையாது. இப்பவும் கவர்னர் ஜெனரல்தான் இருக்காங்க!
\

இவுங்களுக்கு போஸ்டிங் துருக்கியிலே இருக்கற Gallipoli Peninsula என்ற இடத்துலே. முக்கிய காரணம் கருங்கடலிலே மாட்டிக்கிட்ட கோதுமைக் கப்பலை Dardanelles Straits வழியாக் கொண்டு போகறதுக்கு உதவியா, அந்த ஜலசந்தியைத் திறக்கணும்.



நியூஸியிலே இருந்து 8556 வீரர்கள் புறப்பட்டுப் போனாங்க. அதில் முக்காவாசிப் பேரு இளைஞர்கள்.அங்கே யுத்தத்திலே ஈடுபட்டு 2721பேர் 'வீரமரணம்' அடைஞ்சாங்க! மொத்தம் 260 நாட்கள் யுத்தம் நடந்தது.4852 பேருக்குக் காயம்! மீதி ஆட்கள் நல்லபடியா சேதமில்லாம திரும்பி வந்துட்டாங்க!


இவுங்க அங்கே போய்ச் சேர்ந்த நாளுதான் இந்த ஏப்ரல் 25ன்றது! அதுக்கப்புறம் இந்த நாளை நினைவிலே வைக்கணும்,இவ்வளவு ச்சின்ன நாட்டுலே எவ்வளவு தேசபக்தி, ராஜ விசுவாசம், தைரியம் எல்லாம் இருக்குன்னு வரும் தலைமுறைக்கு எடுத்துச் சொல்லணுமுன்னு திரும்பி வந்த ராணுவ வீரர்களும், வீராங்கனைகளும் முடிவு செஞ்சு, அரசாங்கமும் இவுங்களோட தேசபக்தியைப் பாராட்டும் விதமா இதை அரசாங்க விடுமுறையாக அறிவிச்சது!



மரணமடைஞ்சவங்களை புதைச்சிட்டு,துருக்கியிலேயே ஒரு நினைவு மண்டபம்( வார் மெமோரியல்) கட்டினாங்க.இங்கேயும் எந்தெந்த ஊர்களிலே இருந்து ராணுவ வீரர்கள் போனாங்களொ அங்கெல்லாமும் நினைவு மண்டபம் எழுப்பினாங்க. வீரமரணம் அடைஞ்சவங்க பேருங்களையும் அங்கே செதுக்கி வச்சிருக்காங்க.


Returned Service men & women Association (RSA) இதையெல்லாம் செயல்படுத்தறதுலே கவனம் செலுத்தி எல்லாம் முறைப்படி நடக்க உதவுச்சு!
ஒவ்வொரு வருஷமும், இந்த நாளுலே அதிகாலையிலே அந்தந்த ஊர்களிலே இருக்கற நினைவு மண்டபங்களில் விசேஷமான ப்ரேயரும், அங்கங்கே உள்ள ராணுவ வீரர்களின் அணிவகுப்பும் நடக்கும். அரசாங்கத்தின் பிரதிநிதிகள் மலர்வளையம் வைத்து மரியாதை செய்வார்கள். லோகல் கம்யூனிட்டி ஆட்களும் ஏராளமா இதுலே பங்கெடுத்துக்குவாங்க.வீரமரணம் அடைந்தவரின் குடும்பத்துக்கு( அவுங்க பரம்பரைக்கு) அன்னைக்கு விசேஷ மரியாதை! அவுங்களும்அவருக்குக் கிடைத்த மெடல் மற்ற சமாச்சாரங்களை நல்லா மினுக்கி எடுத்துக் கொண்டுவருவாங்க!





முதியோர்கள் இல்லத்துலே இருக்கற வயதான ராணுவ வீரர்கள், இந்த நாளுக்கு ஒரு மாசத்துக்கு முன்னேயேஅவுங்க மெடல்களையெல்லாம் பாலீஷ் செஞ்சு, அடுக்கி, ராணுவ உடையோட கம்பீரமா இதுலே பங்கெடுக்க ஆர்வம் காட்டுவாங்க. சக்கர நாற்காலியிலே இருந்தாலும் கம்பீரம் கொஞ்சம் கூட குறையாம, ஒரு பெருமிதத்தோட அன்னைக்கு வலம் வருவதைப் பார்த்தா நமக்குமே ஒரு உற்சாகம் வந்துரும்!



நம்ம ஊர் கொடிநாள் போலத்தான் இதுவும். சிகப்புக் கலருலே இருக்கற பாப்பிப் பூ( ப்ளாஸ்டிக் தான்)சட்டையிலே குத்திக்கிட்டு, உண்டியல் குலுக்குவாங்க. காசு போட்டவுடன் நமக்கும் ஒரு பாப்பிப் பூ கிடைக்கும். அன்னைக்கு டெலிவிஷனில் வர்றவுங்க( செய்தி அறிவிப்பாளர், வானிலை சொல்றவுங்க, விளையாட்டு நியூஸ் சொல்றவுங்கன்னு)எல்லாம் பாப்பிப் பூவோட தரிசனம் தருவாங்க! இந்தக் கூட்டத்துலே நாமும் சட்டையிலே பூவோடு இருப்போம்.இந்த 'பாப்பி டே'ன்றது ஏப்ரல் 25 க்கு முன்னாலே வர்ற வெள்ளிகிழமை. அதனாலே இந்த வருசத்து 'டே'20 ஆம் தேதியே முடிஞ்சிடுச்சு! நிறைய வாலண்டியருங்களும், பழைய ராணுவ வீரருங்களுமா எங்கே பார்த்தாலும்,குறிப்பா எல்லா ஷாப்பிங் மால்களிலும் நிறைஞ்சு இருப்பாங்க( இருந்தாங்க!)


அரசாங்க விடுமுறையை எல்லோரும் அனுபவிப்பாங்க. கடைகண்ணிங்கெல்லாம் பகல் 12 மணிவரை மூடி இருக்கணும்.காலையிலே தேவாலயங்களிலும் விசேஷ பூஜை நடக்கும். இதேமாதிரி அண்டைநாடான ஆஸ்தராலியாவிலேயும் நடக்குமுன்னு நினைக்கறேன்.


கல்லிபோலியிலே இருக்கற வார் மெமோரியலுக்கு, இந்த நாட்டுப் பிரதமர் வருசாவருசம் போய், அங்கே நடக்கற நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று, அரசாங்க மரியாதையைச் செலுத்திவிட்டு வருவார்!



நாங்க இருக்கற ஊரான கிறைஸ்ட்சர்ச்சிலே ஊருக்கு நடுவிலே ஒரு வார் மெமோரியல் இருந்தாலும், இங்கேஓடற நதியின் குறுக்காக ஒரு பாலம் கட்டி, அதுக்கு 'ப்ரிட்ஜ் ஆஃப் ரிமெம்பரன்ஸ்'ன்னு பேரு வச்சிருக்காங்க.அங்கே ஒரு நுழைவாயில் ஒண்ணு, கற்களால் கட்டி, ஒவ்வொரு கல்லுலேயும் இந்த போரிலே ஈடுபட்ட நாட்டோட பேரையெல்லாம் செதுக்கி இருக்காங்க! வருசாவருசம் இதுக்கு பெயிண்ட் அடிச்சு, இந்த இடத்தை அழகுபடுத்தி வைப்பாங்க. இதுவும் ஒரு டூரிஸ்ட் அட்ராக்ஷந்தான்!


இங்கிருந்து டூரிஸ்ட்டுங்களைக் கொண்டுபோய், கல்லிப்போலியைச் சுத்திக் காமிச்சு, அங்கே 'அன்ஸாக் வாக்'கொண்டு போய் திருப்பிக் கூட்டிட்டு வர்றதும் இப்ப ஆரம்பிச்சு,நல்ல பிஸினெஸா ஓடிக்கிட்டு இருக்கு!



இப்ப 90 வருசமாச்சு. நூறாவது ஆண்டு விழாவை அட்டகாசமாக் கொண்டாடுறதுக்காக இப்பவே தீவிரமாத் திட்டம் தீட்டறாங்களாம்.
எது எப்படி இருந்தாலும், ராணுவம்ன்னு சொல்றது ஒரு நாட்டுக்கு எவ்வளவு தேவையானதுன்னு உங்களுக்கேத் தெரியும்.


உலக நாடுகளிலே எதுவானாலும் சரி, தாய் நாட்டுக்காக உயிரிழந்த போர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தறது அந்தந்த நாட்டுலே இருக்கற ஒவ்வொரு குடிமகன்/மகளுக்கும் கடமை இல்லையா?


ராணுவ வீரர்கள் செய்யற பணி நிஜமாவே மகத்தானதுதான்!!!!

22 comments:

said...

//அப்படியே விட்டுட்டா நான் 'துளசி'யா இருக்க முடியுமா?//

அதானே???

கும்மானிங் டீச்சர் !!!!
இன்னிக்கி நாந்தான் ஆக்டிங் லீடர்.சரியா

said...

வாங்க பெருசு.

குட் மார்னிங்.

நீங்க ஆக்டிங் லீடர்?

ஏன்? கொத்ஸ் 'கல்லிப்போலி'க்குப் போயிட்டாரா? :-)

said...

காலைல 5 மணிக்கு மெமோரியலாம் டீச்சர் வெலிங்டன்ல. பிரதம மந்திரியே போலயாம். பிஸி ஷெட்யூலாம்.
நானும் போடலை- ஹிஹி

said...

வாங்க ச்சின்ன அம்மிணி.

பிரதம மந்திரிக்கென்னப்பா ? ஆக்கணுமா, அரிக்கணுமா?

அவுங்க பிஸின்னா நாம? படு பிஸி:-)))))

said...

இராணுவ வீரர்கள் சரி. இப்போ கிரிக்கெட் வீரர்கள் செமிஸ்ல கோட்டை விட்டுட்டாங்களே!!!!

said...

// படு பிஸி//

தூங்கறதத்தானே சொல்றீங்க.

கிளாஸ்லே தூங்காம முழிச்சுகிட்டு இருக்குற ஒரே ஆளு நாந்தான்.

said...

வாங்க விவசாயி.

// கிரிக்கெட் வீரர்கள் செமிஸ்ல கோட்டை விட்டுட்டாங்களே!!!! //

பேசாம இவுங்களுக்கும் ஒரு மெமோரியல் கட்டிறலாமா? :-)

போட்டும், விளையாட்டை விளையாட்டா(வே)ப் பார்க்கலாம்.
வெற்றி தோல்வி சகஜம்தானே?

said...

பெருசு,

//கிளாஸ்லே தூங்காம முழிச்சுகிட்டு இருக்குற
ஒரே ஆளு நாந்தான். //

அப்டீங்கறீங்க? :-)))))))))))

said...

முதலில் வரவங்க எல்லாம் லீடராக முடியுமா? என்ன கொடுமைடா இது? சரி போகட்டும். இன்னிக்கு ஒரு நாள் அவரு இருந்து பார்க்கட்டும். இந்த பசங்களை கட்டி மேய்க்கிறது எவ்வளவு கஷ்டமுன்னு தெரியும்.

இந்த அவுஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்கள் இங்கிலாந்துக்கு போகும் போது எதோ ஒரு இடத்தில் போய் மலர் வளையம் எல்லாம் வெச்சுட்டுப் போறத வழக்கமா வெச்சுக்கிட்டு இருக்காங்க. அதுவும் இந்த இடம்தானா?

அந்த மாதிரி நியூஸி ஆளுங்களும் செய்யும் வழக்கம் உண்டா?

said...

நல்ல தகவல்கள். நிறைய விடயங்களை அறிந்து கொண்டேன். மிக்க நன்றி.

said...

//அப்படியே விட்டுட்டா நான் 'துளசி'யா இருக்க முடியுமா?//

:)

நல்லா வகுப்பெடுக்கிறீங்க...

said...

உலக நாடுகளிலே எதுவானாலும் சரி, தாய் நாட்டுக்காக உயிரிழந்த போர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தறது அந்தந்த நாட்டுலே இருக்கற ஒவ்வொரு குடிமகன்/மகளுக்கும் கடமை இல்லையா?//

நிச்சயமா. ஹிஸ்டரியில கூட நீங்க ரொம்ப ஸ்ட்ராங்தான் போலருக்கு:))

said...

//ஹிஸ்டரியில கூட நீங்க ரொம்ப ஸ்ட்ராங்தான் போலருக்கு:))//

கிளாசுக்கே வராமல் இப்படி ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கும் ஜோசப்பை எதிர்த்து இன்றைய தாற்காலிக கிளாஸ் லீடர் அறிக்கை விடாததேன்.

அவருக்காவது நமது டீச்சரின் 'வரலாற்றுப் பெருமை' தெரியுமா?

said...

நானும் ஆஜர்.. உள்ளபடியே ஒரு புது விஷயத்தைத் தெரிஞ்சுக்கிட்டேன்.. துளசி மேடம்.. மிக்க நன்றி.

எனக்கு ஒரு சின்ன சந்தேகம். நாங்க ஆஸ்திரேலியா, கிறிஸ்ட்சர்ச் என்கின்றோம். நீங்கள் ஆஸ்தராலியா, கிறைஸ்ட்சர்ச் என்கிறீர்கள். இது உங்களது உச்சரிப்பு தமிழா அல்லது சரியான ஆங்கில மொழி பெயர்ப்பில் சொல்லப்படும் வார்த்தையா?

எதுவாக இருந்தால் என்ன? நான் வழக்கம்போல போட்டோவைச் சுட்டுட்டேன்..

said...

அதானே. நாம தான் துளசி படு பிஸி.

அப்போலேருந்து யுத்தம் ஆரம்பிச்சு இன்னும் முடியலை.
இப்படி ஊர் ஊராப் போயிப் பிள்ளைங்க உயீர விடறது ஏந்தான்னு புரியலை.கொள்கைக்காகன்னா பரவாயில்லை.
வேற எதுக்காகன்னு ஒரு கேள்வி கேட்டா இங்கே-இந்த ஊரில பதில் கிடைக்காது.

said...

வாங்க கொத்ஸ்.

//அந்த மாதிரி நியூஸி ஆளுங்களும் செய்யும் வழக்கம் உண்டா? //

அதெல்லாம் இல்லீங்க. ஆனா எதுக்கெடுத்தாலும் 'ஹாகா' செய்ஞ்சுருவாங்க
'கம்மத்தே கம்மத்தே..........'ன்னு மவோரி வெல்லுவிளி.

said...

வாங்க வெற்றி.

சரித்திரவகுப்புக்கு வந்துட்டு நல்ல விஷயம் தெரிஞ்சுக்காம இருக்க முடியுமா?

said...

வாங்க முத்துலெட்சுமி.

போரடிக்காம வகுப்பு எடுத்தாத்தானே பிள்ளைகளுக்கு(??)
நல்லா இருக்கும்:-)

said...

வாங்க டிபிஆர்ஜோ.

பாருங்க நம்ம கொத்ஸ் எப்படிக் கொதிச்சுட்டார்? :-)))))

ஸ்ட்ராங்கா இல்லேன்னா நாமே 'ஹிஸ்டரி'ஆயிறமாட்டோம்?

said...

வாங்க உண்மைத்தமிழரே.

Australia , Christchurch லே ஆஸ்தி(??) ரேலியான்னு சொன்னா ' தி ' எங்கே வருது?
அஸ்ட்ராலியான்னுதான் லோக்கல் ஆளுங்க சொல்றாங்க.

என்னமோ போங்க, எந்த இடத்தைச் சொல்றேன்னு புரிஞ்சாச் சரி :-)))

said...

வாங்க வல்லி.

பதில் சொல்ல முடியாம இருக்கும் பல கேள்விகளில் இதுவும் ஒண்ணோ?

said...

ANZAC தொடர்பான எனது புகைப்படங்கள்:

தாய்லாந்து: https://photos.app.goo.gl/DXpL2EYuDi7BH45w6

கான்பெரா: https://photos.app.goo.gl/BgWuEofYYvE3drgz6

பெல்பேர்ன்: https://photos.app.goo.gl/zX76X9KR38DVdVMBA