Friday, May 30, 2014

சரயுநதி ரொம்பவே ஸ்பெஷலாக்கும், கேட்டோ!

அப்படி என்ன ஸ்பெஷல்? வைகுண்டம் போக இது ஒரு பைபாஸ் வழின்னு சொன்னா நம்பமாட்டீங்களா?

 கனக் பவன் பார்த்த கையோடு சரயு நதியை நோக்கிப் போனோம். போகும்வழியிலேயே அயோத்தி நகர் பரிக்ரமா சாலை(!) வந்துருது. அதுலே கலக்குமுன் ஆஷார்பி ஆஸ்ரமம் (Asharphi Bhawan)ஒன்னு கண்ணில் பட்டது. இங்கே நடக்கும் வேதபாடசாலையே ப்ரதான்யம்.

இந்த மாளிகை(ஆஷ்ரம்) உள்ளே  பிள்ளைகளோடு  ராமனும் சீதையும்.  படம்: கீழே!  ஆனால் உண்மையில் கர்ப்பிணியாகக் காட்டில் கொண்டு விடப்பட்ட சீதை மீண்டும் அயோத்யாவுக்குத் திரும்பவில்லை:( பிள்ளைகள் மட்டுமே  இங்கே வந்தார்கள். நம்ம வல்லியம்மாவுக்காக இந்த  ஸ்பெஷல் படம்! 

திவ்ய ஷீஷ் மஹல் என்னும் கோவிலையும் போறபோக்கில் வண்டியில் இருந்தே பார்த்தோம். கண்ணாடி மாளிகை. வடக்கே ஏற்கெனவே பல இடங்களில் இந்த கண்ணாடித் துண்டுகளை வச்சு கோவிலின் உட்புறங்களை அலங்கரிச்சு இருக்கும் இடங்களைப் பார்த்த அனுபவம் இருப்பதால் நேரம் களைய வேணாமுன்னு இங்கெல்லாம் போகலை.

 இப்பவே மணி அஞ்சடிக்கப்போகுது. ஆறுமணியானால் சட்னு இருட்டிரும். அதுவும் வடக்கே இப்போ குளிர்காலம் என்றபடியால் பகல் வெளிச்சம் குறைவே. திரும்பிப்போக ஒரு நாலு மணி நேரம் பயணத்துக்கு ஒதுக்கணும். எல்லாம் சேர்த்துக் கணக்குப் போட்டுட்டார் கோபால். ம் ம் என்று ஒரே ஓட்டம்தான் இனி:(

 நதிக்கரைக்குப்போய்ச் சேர்ந்தோம். உள்ளெ நுழையும் பகுதியில் அழகான டிஸைன்களா செங்கல் பாவிய பாதை. வலது பக்கம் கோவில்கள் . இடது பக்கம் நதி. ரொம்ப அருமையா படித்துறைகள், அட்டகாசமா இருக்கு. படிகள் இறங்குமுன் இடதுபக்கம் கரை ஓரமா முழுசும் கற்கள் பாவிய தரை படு நீட்! அங்கங்கே இருக்கைகளா சிமெண்ட் பெஞ்சுகள்!


 சரயூவில் இந்தப் பகுதியில் தண்ணீர், படித்துறைக்கு ரொம்ப தூரத்துலே இருக்கு. மணல்பகுதியா இருப்பதால் நடந்து போய் நீரைத் தொடலாம்.


ஒரு இளைஞர் நதிநீரை ஒரு குடத்தில் மொண்டு வந்து, சைக்கிள் கேரியரில் வச்சுக் கட்டினார். கோவிலுக்குப் போகுதாம் தண்ணீர், சாமி அபிஷேகத்துக்கு! தினம் காலையும் மாலையும் இங்கே வந்து தீர்த்தம் கொண்டு போறாராம். நல்லா இருக்கட்டும்!

 ஹிமயமலையில் இருந்து புறப்படும் சரயு நதி முன்னூத்தி அம்பது கிலோமீட்டர் பயணிச்சு ஒரு இடத்தில் கங்கையோடு கலந்து விடுகிறது. கோடையில் இமயமலைப் பனி உருக ஆரம்பிச்சதும் நதியில் தண்ணீர் படித்துறைக்குப் பக்கம் வந்துருமாம்.

 வலக்கைப்பக்கம் கோவில்களுக்குப் போகணுமுன்னால் நிறைய படிகள் ஏறணும். எல்லாமே மேட்டுப் பகுதி. 'எல்லாம் உள்ளே ஒரே மாதிரி சாமி சிலைகள்தான். மாளிகை மாளிகையாத்தான் கட்டிவிட்டுருக்காங்க. இங்கே இருந்தே ஸேவிச்சுக்கோ'ன்னு 'உத்திரவு' ஆச்சு:(

 ( ஆமாம்.... திரவா இல்லை தரவா? உத்திரவு உத்தரவு இதில் எது சரி? கொத்ஸ் வந்து சொல்லுவரை காத்திருப்போம்!)

 சுற்றமெல்லாம் பின்தொடர தொல்கானம் அடைந்தவனே

 அற்றவர்கட் கருமருந்தே அயோத்தி நகர்க் கதிபதியே

 கற்றவர்கள் தாம் வாழும் கணபுரத்தென் கருமணியே

 சிற்றவை தன் சொல் கொண்ட சீராமா தாலேலோ

 குலசேகர ஆழ்வார் இப்படிப் பாடிட்டுப் போனாராம்!

 108 திவ்ய தேசக்கோவில்களில் அயோத்யாவும் ஒன்னு என்றாலும், ஆழ்வார்கள் வந்து தரிசனம் செஞ்சு பாடின கோவில் எதுன்னு சரியாத் தெரியலை. இங்கே அம்மாஜி மந்திர்ன்னு தமிழ் நாட்டுக் கலையழகோடு ஒரு கோவில் இருக்கு. அதான் இதுன்னு சிலர் சொன்னாலும்.... இது ஆழ்வார்கள் பாடிய கோவில் இல்லை. இந்தக் கோவிலுக்கு வயசு 109 தான். 1905 இல் கட்டி இருக்காங்க.

 நம்ம திருவல்லிக்கேணியில் இருந்து வட தேசங்களுக்கு யாத்திரை வந்த தம்பதிகளான திரு பார்த்தசாரதி அய்யங்காரும், அவர் மனைவி திருமதி சிங்கம்மாளும் அயோத்யா வந்து சிலநாட்கள் தங்குனப்ப, இங்கே ராமனுக்கு ஒரு கோவில் கட்டச் சொல்லி கனவில் உத்திரவாயிருக்கு. ஆர்டர் போட்டவர் நம்ம தில்லக்கேணி மீசைக்காரரே! ஸோ இது பார்த்தஸாரதி சொல்ல, பார்த்தஸாரதி கட்டுன கோவில். அப்புறம் சில வருசங்கள் கழிச்சு ஐயா பார்த்தஸாரதி சாமிகிட்டே போகவும், அம்மா(ள்) சிங்கம்மாள் கோவிலைப் பொறுப்பேத்து நடத்தறாங்க. அம்மாளின் சேவை பிரபலமாகி,கோவிலுக்கே அம்மாஜி மந்திர்னு பேரு கிடைச்சுருச்சு. வடக்கர்களுக்கு அம்மா அம்மா என்னும் சொல் பழகிப்போயிருக்கு. அம்மான்னா சும்மா இல்லை கேட்டோ!!!

 அம்மாவும் கணவர் மறைவுக்குப்பின் முப்பது வருசம் அயோத்யாவில் தங்கி பூஜைகள் நடத்தி கோவிலை நல்லபடி கவனிச்சப்பிறகு சாமிகிட்டே போயிட்டாங்க.

 ஸோ..... இந்த பூரா அயோத்யாவுமே திவ்யதரிசனக்கோவில்னு எடுத்துக்கிட்டேன். தடுக்கி விழுந்தா எதாவது கோவில்களாத்தான் இருக்கு இங்கே. அதுவும் பெரிய மாளிகைகள், முற்றம், வெராந்தாவை அடுத்து கருவறை இப்படியே பலதும் இருக்கு. சாமிச் சிலைகளும் அநேகமா ஒன்னைப்போலவே ஒன்னு. வெண் பளிங்கு, கரும்பளிங்கு இப்படித்தான் எல்லாமே! அம்மாஜி கோவிலில் மட்டும் நம்ம பக்கம் தரிசனம் செஞ்சுக்கும் கற்சிலைகளின் வகையில். இங்கே ரங்கநாதரின் (பள்ளிகொண்ட ) சிலையும் இருக்காம்.

 நமக்குத்தான் தரிசனம் செஞ்சுக்க அதிர்ஷ்டம் இல்லாமப் போயிருச்சு. இத்தனைக்கும் இது அமைஞ்சுருக்கும் கோலா காட்டில் போய் சரயூவை வேடிக்கைப் பார்த்திருக்கோம். பக்கத்துலேதான் இருக்குன்னு அப்பத் தெரியாமப்போச்சு பாருங்க:(


 இன்னும் பிர்லா மந்திர், வால்மீகி பவன், ஹனுமன்கதி ன்னு முக்கிய கோவில்கள் இருந்தாலுமே நம்மை மாதிரி வெறும் 4 மணி நேரம் போதாது. குறைஞ்சபட்சம் ஒரு நாள் அங்கே அயோத்யாவில் தங்கினால் இன்னும் ஒரு பத்துப்பதினைஞ்சு கோவில்களைப் பார்த்துருக்கலாம்.




மேலே: ஹனுமன் கதி கோவில். எழுபத்தியாறு படிகள் ஏறணும்.  மிஸ் பண்ணின கோவில்களில் இதுவும் ஒன்னு:(


பதினோராயிரம் ஆண்டுகள்( !!??) அரசாண்ட ராமர் தன் பிள்ளைகளுக்குப் பட்டம் கட்டிட்டு பூலோகத்துக்கு வந்த வேலை முடிஞ்சதுன்னு திரும்பிப்போன இடம் குப்தர் காட். அதுவும் காலதேவன் வந்துதான் ஞாபகப்படுத்தினாராம். 'ராமா, நீ வந்த வேலை முடிஞ்சது. வைகுண்டத்துக்குத் திரும்பி வரணுமு'ன்னு. மனுசனா அவதாரம் செஞ்சு மனுச வாழ்க்கையையே வாழ்ந்துக்கிட்டு இருந்த ராமருக்கு அப்பதான் தன் அவதார ரகசியம் புரிஞ்சுருக்கு.

 'உடனேவா? அப்புறம், கொஞ்சநாள்' இப்படி சாக்கு போக்கு ஒன்னும் சொல்லாம சட்னு கிளம்பிடறார். அவர் ரெடியானதும் தம்பி லக்ஷ்மணர் முதலில் போய் சரயு நதிக்குள் இறங்கி தன் பூலோக வாழ்க்கையை முடிச்சுக்கறார். இந்த இடத்தை லக்ஷ்மணா காட் என்றுதான் சொல்றாங்க. (இதுக்கு வேறொரு வெர்ஷன் கூட இருக்கு. )

 தமையன் உத்திரவை மீறினபடியால் தானே தவத்தில் இருந்து சமாதி ஆகிட்டாராம். என்ன உத்திரவு? ஏன் மீறணும்? காலதேவன், ராமரை சந்திக்க வந்தப்ப, நாங்க உள்ளே பேசி முடிக்கும்வரை யாரையும் அனுப்பாதேன்னு லக்ஷ்மணனைக் காவல் வச்சுருக்கார் ராமர். அப்போ பார்த்து துர்வாஸர் ராமனை சந்திக்க வந்துருக்கார். உள்ளே இப்போ போக அனுமதி இல்லைன்னு லக்ஷ்மணன் மறுக்க துர்வாஸருக்குக் கோபம் தலைக்கேறி இருக்கு. எங்கே ராமரை சபிச்சுடப்போறாரோன்ற பயத்தில் சட்னு கதவைத் திறந்து அங்கே நடந்து கொண்டிருந்த ஒன் டு ஒன் மீட்டிங்கில் போய் துர்வாஸர் வந்த சமாச்சாரத்தைச் சொன்னாராம். அண்ணன் சொல்லை மீறிட்டார்:( அதுவே அவருக்கு குற்ற உணர்ச்சியைத் தந்ததால் எல்லா பந்தங்களையும் விட்டுட்டு, தவம் இருந்து சமாதி ஆனார் !

 கதை எப்படியானாலும், ராமனுக்கு முன் பூலோகம் விட்டுப்புறப்பட்டவர் லக்ஷ்மணர்தான். தேவலோகக் கணக்குப்படி இவரும் வைகுண்டவாசிதான். ராமர் மகாவிஷ்ணு என்றால் லக்ஷ்மணர் ஆதிசேஷன். அதான் ராமவதாரம் எடுத்த மஹாவிஷ்ணு, திரும்ப பாற்கடல் வருமுன் (பாம்பு) படுக்கை விரிக்க ஜல்தியாப் புறப்பட்டுட்டார். பரதனும் சத்ருக்னனும் கூட பெருமாளின் சங்கு சக்கரங்களே. சீதை? சாக்ஷாத் மஹாலக்ஷ்மி. அவள் மண் மகளாப்பிறந்து, மண்ணுக்குள்ளேயே இறங்கி மறைஞ்சாள். பாருங்க எல்லோருமெப்படி ஒரு பெரிய க்ரூப்பா வந்து அவதரிச்சு இருக்காங்க.

 ராமர் மேல் அதிக அன்பு கொண்ட அயோத்தி மக்கள் நாங்களும் கூடவே வரோமுன்னுட்டு ராமர் சரயுவில் இறங்குனதும் கூடவே அவுங்களும் நதியில் இறங்கி வாழ்வை முடிச்சுக்கிட்டாங்களாம். ராமரின் கூடவே பரதனும் சத்ருக்னனும் பூத உடலை விட்டாங்க. ராமரின் உடலை தகனம் செஞ்ச இடம் ஸ்வர்க் த்வார் என்னும் படித்துறையாம்.சொல்லக் கேள்வி.

 கூடப்போன கூட்டத்தில் நம்ம ஆஞ்சி இல்லையாக்கும் !!! 'ராமநாமம் கேட்டபடி பூலோகத்தில் இருப்பேன். எனக்கு வைகுண்டம் வேணாமு'ன்னுட்டாராம் சிரஞ்சீவி!

 குப்தர்காட் போக எனக்கு ஆசையா இருந்துச்சுன்னாலும், ஆனந்த , 'வோ த்தோ பஹூத் தூர் ஹை'னு சொல்லிக் கையை நீட்டி எதோ ஒரு திக்கைக் காமிச்சதும் 'சரி சரி. அதெல்லாம் வேணாமுன்'னுட்டார் நம்மாள்.

 (கடைசியில் பார்த்தால் இங்கிருந்து சுமார் 11 KM தூரம் தான். அதுவும் நாம் திரும்பிப்போகும் வழியிலிருந்தேதான். ஃபைஸாபாத் கண்டோன்மெண்ட் அருகில் சரயு நதி ஓடுதே அங்கெதான்னு அப்புறம் எனக்குத் தெரியவந்ததும் 'இப்படிக் கோட்டை விடுவளோ ஒருத்தி'ன்னு மனசு கிடந்து அடிச்சுக்கிட்டது நிஜம்)

அயோத்யாவில் பெரும் மாளிகைகள் எல்லாம் கோவில்களே. மத்தபடி சாதாரண மக்கள்,  சாதாரண வீடுகளில்தான் இருக்காங்க. அடுக்கு மாடிக் குடி இருப்புகள் பல. எல்லாம் பழைய லுக் கொடுக்குது. கூரை வீடுகளும் ஓட்டு வீடுகளும்தான் ஏராளம். அங்கங்கே எருமை மாடுகளைக் கட்டி வச்சுருக்காங்க. ஒரே ஒரு பசுதான் கண்ணில்பட்டது:-)



நாமும் பரிக்ரமா ரூட்டிலேயே வந்து மீண்டும் ஆனந்தை பிக்கப் பண்ண இடத்துக்கே வந்துருந்தோம்.நாட்டாமை சொல்லி வச்சது போல 'சௌ ருப்யா' கொடுத்துட்டு, ஆனந்துக்குத் தனியாக் கொஞ்சம் காசு கொடுத்தார் கோபால். வண்டிவந்து நின்னதும் நாட்டாமை உட்பட எல்லோரும் ஓடி வந்தாங்க. 'நூறுதானே கொடுத்தீங்க? அதிகம் ஒன்னும் அவன் கேக்கலை இல்லையா?' ன்னு நாட்டாமை கேட்டதுக்கு , 'ஆமாம் நூறுதான்கொடுத்தேன்' என்றார் நம்மவர்.

 வந்த வழியிலேயே திரும்பி ஃபைஸாபாத் பெட்ரோல் பங்கில் அஞ்சு மினிட் ஸ்டாப். இப்போ (டாய்லெட்) சாவி இருக்குமிடம்தான் நமக்கே தெரியுமே:-)))

 வரும்வழியில் ஒரு இடத்தில் (சுல்தான்பூர் ) சாய் குடிக்க நிறுத்துனோம். ட்ரைவர் சாயா குடிக்கும்வரை, நாம் வண்டி நிறுத்தின இடத்தில் இருந்த மிட்டாய்க்கடையை வேடிக்கை பார்த்தேன். சுடச்சுட குலோப்ஜாமூன் தயாராகிக்கிட்டு இருக்கு. பக்கத்துலேயே கடாயில் சுண்டக் காய்ச்சும் பால். கேமெராக் கண்ணால் தின்னேன்.

 என்னதான் விரட்டிக்கிட்டு வந்தாலும் ஹொட்டேலுக்கு வந்து சேர ராத்ரி பத்தரை ஆகிப்போச்சு.

 'நல்ல நல்ல கோவில்கள் நிறைய இருக்கு ..... ப்ச்.... விட்டுட்டோமு'ன்னு முணங்கினேன். 'இவ்வளவாவது கிடைச்சதே சந்தோஷப்படும்மா. நீ முதல்லே என்ன சொன்னே? ராமன் பிறந்த இடத்தை அட்லீஸ்ட் தரிசனம் செஞ்சுக்கிட்டு அயோத்யா மண்ணில் ஜஸ்ட் கால் வச்சுட்டு வந்தாப்போதும்னு தானே?'

 அட.... ஆமாம்லெ!  

 தொடரும்...........:-)

18 comments:

said...

பெரிய க்ரூப் தான்... வாழ்த்துக்கள் அம்மா...

said...

அயோத்திக்கே நேரில் சென்று வந்த அனுபவம் கிடைத்து விட்டது, அம்மா!

said...

Ramani S
5:06 PM (5 hours ago)
Reply
to me
Ramani S has left a new comment on your post "சரயுநதி ரொம்பவே ஸ்பெஷலாக்கும், கேட்டோ!":

தங்கள் தயவில் தரிசித்தோம்
பகிர்வுக்கும் தொடரவும்
நல்வாழ்த்துக்கள்

said...

சரயு நதி...... அயோத்யா சென்று வரணும்.... எப்போ என்று தான் புரியல.....

படங்கள் அருமை.....

said...

அருமை யான விளக்கம் அதற்கேற்ற அழகிய படங்கள் !!
ஹனுமான் வைகுண்டம் போகாமலிருப்பதற்கு வேறு காரண க்கதைகள் ஏதும் உண்டா ? இருந்தால் பகிர்ந்துகொள்ள முடியுமா ?
எவ்ளோ தான் பாத்தாலும் பாக்காம விட்டது கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும் .

said...

வர்ணனைகள் முகவும் ரசிக்கும்படியாக இருந்தன.

said...

தரவு என்றாலே கட்டளை என்ற ஒரு பொருள் இருக்கு. அதனால உத்தரவுதான் சரி என்பது எனக்குப் பாடம். அது மருவி உத்திரவு என ஆகி இருக்கலாம்.

நான் எதையாவது சொன்னா திட்ட ரெடியா ஆள் இருக்கு தரவு தரவுன்னு கேட்பாங்க. உத்தரவுன்னு சொல்லிட்டா அதுலவே தரவு இருக்கே. அதனால அதுவே சரின்னு சொல்லிடுவோம். :)

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

வாங்க அய்யாசாமி ராம்.

அதுக்காக, நேரில் செல்லும் வாய்ப்பு கிடைச்சால் விட்டுவிட வேணாம்:-)

said...

வாங்க ரமணி.

உங்கபின்னூட்டத்தைத் தவறுதலா டெலீட் செஞ்சுட்டேன் நோட்புக் பயன்படுத்தியபோது.

பப்ளிஷைத் தொடுமுன் விரல் அருகே வரும்போதே டெலீட் ஆகிருச்சு:(

ரொம்பவே சென்ஸிடிவ் இதுகள் எல்லாம்!

அதான் காப்பி & பேஸ்ட்டா போட்டுருக்கேன். மன்னிக்கணும்.

தொடர்வதற்கு நன்றிகள்.

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

இனிய நன்றி.

said...

வாங்க கொத்ஸ்.

ஆஹா ஆஹா....உத்தரவு உத்தர்வு.

கொத்ஸின் உத்தரவு கிடைச்சதில் மகிழ்ச்சி.

பதிவுக்கு, என்னெல்லாம் சொல்லி இழுத்துவர வேண்டியிருக்கு பாருங்க:-))))))

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

நீங்கள் தில்லியில் இருப்பதால் பல சௌகர்யங்க்ள் இருக்கே!

நினைச்சால் சட்னு கிளம்பிடலாம்!

ஆனால்...ஒன்னு. எதுக்கும் வேளை வரணும், இல்லே?

போய் வந்து எழுதுங்க!

said...

வாங்க சசி கலா.

உண்மைதான். போதுமென்ற மனம் இதுலே மட்டும் வரவே மாட்டேங்குதே:(

ஹனுமன், ராம நாமம் சொல்லும் இடம் எதுவா இருந்தாலும் அங்கே உக்கார்ந்து ரசிச்சுக்கிட்டே பக்தி பண்ணிக்கிட்டு இருப்பாராம்.

அட ராமா, அடராமான்னு நான் சொல்லும்போதும் எழுதும்போதும் தமிழ்மணத்துலே இருப்பார் என்று நம்புவோமாக:-)))

said...

இழுத்துக்கிட்டு எல்லாம் வர எங்க போனேன்? ஐயாம் ஆல்வேஸ் ஹியர்!

said...

\\அயோத்திக்கே நேரில் சென்று வந்த அனுபவம் கிடைத்து விட்டது, அம்மா!\\ mikka nanri teacher

said...

ரொம்ப ரொம்ப நன்றி துளசி மா. எனக்குதான் இரண்டு நாளா வரமுடியாமல் போச்சு. லவ குசா வந்தே விட்டார்கள் .தரிசனம் ஆச்சு. படிகளைப் பார்த்தால் கீழே இருந்தே சேவிக்கலாம்னு தான் தோன்றுகிறது. நாலுமணி நேரத்தில் நிறைய கவர் செய்திருக்கிறீர்கள். ஆதி சேஷன் விஷ்ணு,மஹாலக்ஷ்மி என்று பட்டாளம் இறங்கித்தான் ராவணன் கதை முடித்தார்கள். அதைவிடப் பிரமாத ராவணன்கள் வரப் போவதை அறியாமல்.

said...

அன்பு துளசிமா . வர லேட்டாயிடுத்து. லவகுசர்கள் எனக்காகவே தரிசனம் கொடுக்க வந்துவிட்டார்கள். ராமர் சரயுவில் இறங்குவதைப் பார்க்க கஷ்டமாகத்தான் இருக்கிறது. அதுதான் ஜலசமாதி ஆயிற்றே. எதற்குத் தகனம் வேறு.....ம்ஹூம் புரியவில்லை. அவர் மாட்டுப் பாற்கடலுக்கு லக்ஷ்மி கிட்டே போயிருப்பார் இல்லையா. படிகளின் உயரம் பயமுறுத்துகிறது. நான் இங்க இருந்தே கும்பிடு போட்டுக்கறேன். ரொம்ப ரொம்ப நன்றிமா.