Wednesday, July 01, 2015

எழுத்தாளரும் பதிவர்களுமா இன்றைய சந்திப்புகள்!!!! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 62)

நல்லாத்தான் பழக்கப்படுத்தி வச்சுருக்கோம், இந்த வயித்தையும் மனசையும்.  வயிறு கேக்குதோ இல்லையோ....  மனசு மட்டும் டான் டான்ன்னு ஞாபகப்படுத்திக்கிட்டே இருக்கும்:(  ஒன்னுமில்லை ஒரு வாய் காப்பித் தண்ணிக்குத்தான்!  கல்லணையிலிருந்து கிளம்பி  ஸ்ரீரங்கம் வந்து சேரவே  நாப்பது நிமிட் ஆகிப்போச்சு.  போக்குவரத்து கொஞ்சம் கூடுதலா இருக்கு.

ராஜ கோபுரம் கண்ணில் பட்டதும்,  முரளி காஃபி கடைக்குப்போயிட்டு, எஞ்சினுக்கு எண்ணெய் ஊத்திக்கலாமே தோணுச்சு. கோபாலிடம் சொன்னதும், நானும் அதேதான் நினைச்சேன்னார். நம்ம சீனிவாசனுக்கு ஒரு காது எப்பவும் நம்ம பக்கமென்பதால் டக்ன்னு  முரளிகடை வாசலில்  கொண்டு போய் நிறுத்தினார்.

இதுக்குள்ளே நம்ம ரோஷ்ணியம்மாவுடன்  தகவல் பரிமாற்றம் நடத்திக்கிட்டே இருந்தோம்.  எல்லாம் டெக்ஸ்ட் மெஸேஜ்தான்:-) விலாசம் அனுப்பி வச்சாங்க.  பதிவர் சந்திப்புக்குப் போறோம்.


காஃபி விலை ஏறிப்போச்சுன்னு அறிவிப்பு பார்த்தேன்.  அப்படியும் இங்கே மலிவுன்னுதான் தோணுது.  கடையில் கூட்டத்துக்குக் குறைவில்லை. ரொம்ப பிஸியான நேரம்!

காஃபி வரக் காத்திருந்த ஒரு நிமிசத்தில்  கைவண்டி ஒன்னு  என்னாண்டை வருது.  பஜ்ஜி வாசனையோ மூக்கைத் துளைக்குது. சடார்னு திரும்பிப் பார்த்தால்  மூணு ட்ரேக்களில்  பஜ்ஜி, போண்டா, அப்புறம் மிளகாய் பஜ்ஜின்னு நினைக்கிறேன். கூடவே பக்கெட்டுகளில் சட்னி வகைகள்.  ப்ச்...  வடை இல்லை பாருங்க:(

வாங்கலாமான்னு ஆசை இருந்தாலும் பயந்துக்கிட்டு வேணாமுன்னு சொல்லுமுன் கோபால் வாங்கிட்டார்.  சூடாத்தான் இருக்குன்னதும் தொட்டுப் பார்த்தேன். கை பொள்ளும் சூடு!  அப்ப ப்ரச்சனை இல்லை. எனக்கு ஒரு வாழைக்காய் பஜ்ஜி போதும். நோ சட்னி.  அவுங்க ரெண்டு பேரும்  வகைக்கு ஒன்னுன்னு  வாங்கிக்கிட்டாங்க. சுடச்சுட பஜ்ஜி தின்னுட்டு, சூடா ஒரு காஃபி குடிச்சதும்  நாக்கு ஆஹா சொன்னது.  வெறும் காஃபி மட்டும் குடிக்கும்போது வராத ஒரு திருப்தி,  டிஃபன் கூடச் சேர்த்து காஃபி குடிக்கும்போது வந்துருது இல்லே!

சொன்னால் சொன்ன நேரத்துக்கு வீட்டு வாசலுக்குப்போய் இறங்கியாச்சு. ரோஷ்ணிக்குட்டி கீழே இறங்கிவந்து நமக்கு வழி காட்டுனது  இனிமை.  பார்த்து ரெண்டு வருசம் ஆச்சு. இன்னும் உசரமா வளர்ந்துருக்காள்.

இந்த வீட்டில் மூணு பதிவர்!  பதிவர் குடும்பமப்பா!  வீட்டுக்கதவருகே ரோஷ்ணியம்மா நின்னு  'வாங்க டீச்சர்'னு வாய்நிறையக் கூப்பிட்டாங்க. வீட்டுக்குள்ளே இன்னொரு எழுத்தாளர்/ பதிவர்  குடும்பத்துடன்  நம்மை சந்திக்க வந்துருந்தார்.  ஸ்ரீரங்கம் ரிஷபன் ஸார். அவர் என்னவோ என்னைவிட வயதில் ரொம்பவே குறைந்தவரென்றாலும்,  எனக்கு இந்த ஸார் மட்டும் எப்படியோ அவர் பேரோடு ஒட்டிக்கிச்சு:-)

நமக்கு  டீ போட எழுந்த ரோஷ்ணியம்மாவை அப்படியே உக்காரவச்சு, முரளிகடையில் காஃபி விலை ஏறிப்போச்சுன்ற சேதியைச் சொன்னேன்:-)

ரோஷ்ணியம்மான்னா தெரியாதவங்களுக்கு....  கோவை2தில்லி வலைப்பதிவின் உரிமையாளர்  ஆதி வெங்கட். நம்ம  வெங்கட் நாகராஜ் (தலைநகர் பிரபலம்) அவர்களின்  தங்க்ஸ்.  வெங்கட் எனக்கு அஞ்சு வயசு சின்னவர்!   அதிர்ச்சியா இருக்கா?  நான் சொல்ற வயசு பதிவுலகத்துக்கு  வந்த  காலக்கணக்கில்:-) தில்லியில் வேலை, திருவரங்கத்தில் வீடு,  இடைப்பட்ட நாட்களில்  பயணங்கள் இப்படி அடிச்சு ஆடிக்கிட்டு இருக்கார்.  என்னால்  நேரில் போக முடியாமப்போன  பல வட இந்தியப் பயணங்களுக்கு  இவர்தான் கூட்டிப்போறார் தன் பதிவுகள் மூலம்!


ரோஷ்ணி இப்போ படங்கள் வரைவதில் ரொம்ப முன்னேறி இருப்பது, அவுங்க அம்மாவும் அப்பாவும் தங்கள் பதிவுகளில் போட்டு வைக்கும் படங்களே சாட்சி.  பள்ளிக்கூடத்தில்  ஆர்ட் க்ளாஸில் ,அதுக்கான விசேஷப்பரிசு கிடைச்சுக்கிட்டு இருக்கு!


இதைத் தவிர  க்வில்லிங் என்ற புதிய கைவேலை இப்ப பரபரப்பா ஓடிக்கிட்டு  இருக்கு பாருங்க அதுலேயும் கில்லாடி.   இதுக்குன்னே  ஏகப்பட்ட சமாச்சாரங்கள்  வாங்கிக்கணும்.  எல்லாத்தையும் கொண்டு வந்து எப்படிச் செய்யணுமுன்னு ரோஷ்ணி விளக்கினாலும்....  என் மரமண்டைக்கு......  யூ கெனாட் டீச்  நியூ ட்ரிக்ஸ் டு அன் ஓல்ட்  டாக் அண்ட்  ஆல்ஸோ த  டாக் இஸ் டூ ஒல்ட் டு லேர்ன்  தீஸ் நியூ திங்ஸ்:-)))))))))


காதணிகள் சூப்பர் அழகா இருக்குல்லே!

எனக்கு விவரம் தெரிஞ்சு  பெண்கள் ஹாபியா இருந்தது, க்ரோஷா பின்னுவதும்  துணிகளில் பூத்தையல் போடுவதும்.  தலையணை உறை,  கர்ட்டன் போல வாசலுக்கு பின்னித்தொங்க விடுவது,   ப்ளெய்ன்  பெட் ஷீட்டில் பூத்தையல் (தலையணை உறைக்கு மேட்ச்சா!) இப்படி இருந்துச்சு.  எங்க சின்னக்கா இந்த வேலைகளில் கில்லாடி!  உள்ளுடைகளிலும்  ஓரத்துலே க்ரோஷா ஊசி வச்சு  சின்னதும் பெருசுமா லேஸ்  பின்னிருவாங்க.  அப்பெல்லாம்  நாயுடுஹால்  சமாச்சாரம்  நாட்டுக்குள்ளே வரலை.  உள்பாடீஸ்  டெய்லரிடம் தைச்சு வாங்கிக்கணும்.  அதுலேதான்  கழுத்து, தோள்பட்டை ஓரங்களில்   அழகான வண்ண  நூல்களால்  டிஸைன்ஸ். எக்ஸ்க்ளூஸிவ்:-)))


அப்புறம் ஒயர் கூடை பின்னும் சீஸன்....   பசங்களுக்கு எப்படி கில்லி,  கோலி, பம்பரம், பட்டம் இப்படி சீஸன்கள் இருக்கோ அதே போலதான் இதுவும்:-)
என் காலத்துலே  நான் இப்படி ஒன்னும் செய்யலை. சரியான சோம்பேறி!

கிட்டத்தட்ட ஒன்னேகால் மணி நேரம்  பேசி இருக்கோம்!  நம்ம ரிஷபன் ஸாரை முதல்முறை பார்க்கிறோம் என்ற  ஒரு உணர்வுகூட இல்லாமல்  அப்படி கதை பேசி இருக்கோமுன்னா பாருங்களேன்.... பதிவர் குடும்ப உறவுகள் எப்படி ஸ்ட்ராங்கா இருக்குன்னு:-)

கொஞ்சம் படங்கள் க்ளிக் செஞ்சுக்கிட்டேன் என்றாலும், நம்ம ரிஷபன் ஸாருக்கு அவருடைய படங்கள் வெளிவருவது   விருப்பமில்லை என்றபடியால்  எல்லாம்  சொந்தக் கலெக்‌ஷனுக்குப் போயிருச்சு.

கிளம்பி வெளிவரும் சமயம்தான் வெங்கட்டின் அம்மா வந்தாங்க. நலம் விசாரிப்புடன்  முடிச்சுக்கிட்டேன்.


அடுத்த  அஞ்சாவது நிமிட் ரங்கா கோபுர வாசலில்  இறங்கிக்கிட்டோம்.  சீனிவாசன்  பார்க்கிங்  போட்டுட்டு வருவார்.  கேமெரா சீட்டு  வாங்கிக்கணுமான்னு   யோசிச்சுக்கிட்டே   ரெங்கவிலாச மண்டபத்தில்  சீட்டுக்காரர் இருக்கும் இடத்தைப் பார்த்தால்  யாருமே இல்லை.  மணி வேற  எட்டு பத்து.  இருட்டிக்கிடக்கு, இதுலே  ஃபோட்டோ வேறயா?


உள்ளே போய் கருடாழ்வாரை  ஸேவிச்சுக்கிட்டுச் சும்மா  ரெங்கன் கருவறை  இருக்கும் ப்ரகாரம் வரை போய்  வெளியே இருந்தே  திசை பார்த்து ஒரு  கும்பிடு. அப்புறம் வெளியே ப்ரகாரங்களில்  சும்மா  காலாற ஒரு நடை. தாயாருக்கும், சுதர்ஸனருக்கும், கோதண்ட ராமருக்கும்,  நரசிம்மருக்கும் நம்ம ராமானுஜருக்கும்  போற போக்கில்  வணக்கங்கள்தான். நந்தவனத்தின் வழியா ஒரு நடை. பூத்துக்கிடக்கும் பூக்களில் இருந்து   வரும் மெல்லிய  மணம்....  மனசுக்கு நிறைவைத் தந்துச்சு.


ஆண்டாளைக் காணோம். தூங்கப்போயிட்டாள் போல! அவள் நிற்கும் இடம் வெறிச்:(

கோவிலில் பராமரிப்பு வேலைகள் நடப்பதால்   அரை இருட்டில்  கவனமாகத்தான் போகணும். எங்கே பார்த்தாலும்  கல்லும் மண்ணும் கட்டைகளும்...... கும்பாபிஷேகம் எப்போ வச்சுருக்காங்கன்னு  தெரியலை!

சும்மாச் சுத்திச் சுத்தி வந்துக்கிட்டே  நேத்து இரவில் பிரஸாதம் வாங்கின அறைக்கு வந்தால்  கதவே பூட்டி இருந்துச்சு.  எல்லாம்  காலி!  ரெங்கவிலாஸ் மண்டபத்தில் இருக்கும் ப்ரஸாத ஸ்டாலில்   வகைவகையா வச்சுருக்காங்க.  பாவம் பெருமாள்.  இதெல்லாம் இருப்பது தெரியாது போல!  வெறும் தச்சு மம்முவையே அனுதினமும் சாப்பிடறார்! தொட்டுக்கக்கூட ஒன்னும் கிடையாது போல! பாவம்:(


ஸ்டாலைத்தவிர  இந்தப்பக்கம் பெரிய  பாத்திரங்களைக்  கண்ணாடிப்பெட்டிக்குள் வச்சு அதுலே  புளியோதரை, தயிர்சாதம், சக்கரைப்பொங்கல்  வச்சுருந்தாங்க. அங்கேயே சாப்பிடுவோருக்கு வாழை இலையிலும்,  டேக் அவே என்றால்  அலுமினியம் ஃபாயில் உள்ள  கன்டெய்னரிலும் வச்சுக் கொடுக்கறாங்க.

பேசாம  டின்னருக்கு இங்கிருந்து வாங்கிப்போயிடலாமுன்னு   அந்த   புளியோதரை, தயிர்சாதம், சக்கரைப்பொங்கல் வகையில் ஒவ்வொன்னும்,  திருப்பதியாரை நினைச்சு ரெண்டு லட்டு, ரெண்டு  வடையும் பார்ஸல் வாங்கியாச்சு. ஸ்டாலில் காசு அடைச்சப்ப  அவர்  ஒரு ரூபாயை எனக்குக் கூடுதலா தந்துட்டார். சில்லரை இல்லையாம்.  அடப்பெருமாளே!  என்னை இப்படிக் கடன்காரி ஆக்கிப்பிட்டாயே:(   பரவாயில்லைம்மா  ஒரு ரூபா தானேன்றார்  ஸ்டால்காரர்.  எனக்கு ரொம்பவே பேஜாராப்போச்சு!

 சீனிவாசன் ஆளைக் காணோம்.  அவரிடம் ஒரு ரூ இருக்கான்னு  கேட்கலாம். வரட்டும்னு  கொஞ்சநேரம் அக்கம்பக்கம் வேடிக்கை.  ஆளைக் காணோமேன்னு செல்லில் கூப்பிட்டால் ' வெளியே இருக்கேன்.  பார்க்கிங் சரியாக் கிடைக்கலை. பக்கத்துத்தெருவில் நிப்பாட்டி இருக்கேன். நீங்க வாசலுக்கு வந்துருங்க. அதுக்குள்ளே வண்டியை அங்கே கொணாந்துருவேன் 'என்றார்.

அதன்படியே வெளியே  வந்ததுக்கும் வண்டி வரவும் சரியா இருந்தது. ஒன்பது நாற்பதுக்குத் திருச்சி    சங்கம் வந்து சேர்ந்தோம். சீனிவாசனை சாப்பிட்டு வந்து நல்லா ரெஸ்ட் எடுக்கச் சொல்லிட்டு  அறைக்குப் போனோம்.
சாமியைவிட மனுசனுக்கு நாக்கு நீளம்! அதான்  தச்சு மம்முவுக்குக் கொஞ்சம் ஊறுகாயும் வச்சுத்தந்துருக்காங்க!!!!


ரெண்டாவது நாளா இப்படி  சாமி ப்ரஸாத டின்னர் எடுத்துக்கறேன். என்னதான் காண்ட்ராக்ட் முறையில்  வெளியில்  செய்து கொண்டுவந்து பிரஸாதம் விற்றாலும் கூட....    ரொம்ப ஆராயக்கூடாது.  நம்பணும்.   ஒன்னும் ஆகாது. ஆகக்கூடாது ..... க்ருஷ்ணார்ப்பணம்!

தொடரும்.........:-)


PINகுறிப்பு:  ஆமாம்... எனக்கு ரொம்பநாளா ஒரு சந்தேகம்.  இப்பப் பாருங்க....மூலவரை தரிசனம் செஞ்சுக்காமலேயே   கோவிலுக்குள் புகுந்து   எல்லா சந்நிதிகளையும்  பார்த்து வணங்கிட்டு வர்றோம்தானே? இதே போல எல்லாக் கோவில்களிலும்  உள்ளே போய் சுத்தமுடியுதே.... இப்படி திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்குள் போய் சுத்தமுடியுமா? பெருமாள் தரிசனம் வேணாம்.   அவ்ளோ நேரம் வரிசையில் நின்னு  ஸேவிப்பது கஷ்டம்.

 துணிஞ்சு  வரிசையில் போனாலும் ஒரு விநாடி கூடப் பார்க்க முடியாமல் வல்லரக்கிகள்  கைபிடித்து இழுத்து வெளியே  கடாசிப்பிடறாங்களே:(  அப்புறம் அழுதழுது  தலைவலிதான் மிச்சம். இனிமேல் வர்றதில்லைடான்னு சொல்லிட்டு வந்துருக்கேன்.  அதுக்காக.......

 சும்மா ப்ரகாரம் சுத்த வாய்ப்புண்டா? தெரிஞ்சவங்க கட்டாயம் சொல்லுங்க.
கொஞ்சம் வாக்கு மீற ஆசை:-)



32 comments:

said...

கோயில்உலா அருமை. ரோஷ்ணி அறிமுகம் நன்று.

said...

ரோஷ்ணி அவர்களுக்கு பாராட்டுகள்... பதிவர்கள் குடும்பத்திற்கு வாழ்த்துகள்...

போவதில்லை என்று முடிவு செய்தால் கூட... போக வேண்டும் என்றிருந்தால் தான் போகவும் முடிகிறது...!

said...

ஆஹா... இன்னிக்கு நம்ம வீட்டுக்கா.... சரி.

திருவரங்கம் போல, பல கோவில்களில் வெளிப் பிரகாரம் சுற்ற வழி உண்டு. திருப்பதி பற்றி தெரியவில்லை. திருப்பதி போய் கிட்டத்தட்ட 25 வருடங்களாகி விட்டன! எப்போது அழைப்போ தெரியவில்லை!

said...

க்ருஷ்ணார்ப்பணம்! ஹா ஹா. பல இடங்களில் இப்படித்தான் சொல்லிக்க வேண்டியிருக்கு.

said...

இந்த க்வில்லிங் வேலை இப்போது எல்லா இடங்களிலும், ஒரு ஃபேஷன் போல் பரவி இருக்கு. பதிவர்களில் ஒருவர் முகில் என்னும் பெயர் அவரது கை வேலைகளை விவரித்துப் படமும் போடுவார், அதிலிருந்து நான் கற்க அவரை அணுகினேன் வலையில் செய்முறைகள் நிறையவே கிடைக்கிறது என்றார். ஆமாம் எனக்கு ஒரு வார்த்தைக்கு அர்த்தம் புரியலை “தங்க்ஸ்” என்றால் என்ன.?

said...

ரசிக்க வைத்த பதிவு!
திருப்பதியில் வெளிப்பிரகாரத்தை சுற்றி வரலாம் என்று என் நண்பர் ஒருவர் சொன்னார். அது எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

said...

குட்டிப்பதிவர் ரோஷ்ணிக்குப் பாராட்டுகள். எவ்வளவு கைவேலை தெரிந்துவைத்திருக்கிறாள்... எல்லோருக்கும் இத்திறமை அமையாது. சரிதான்.

\\நம்ம ரிஷபன் ஸாரை முதல்முறை பார்க்கிறோம் என்ற ஒரு உணர்வுகூட இல்லாமல் அப்படி கதை பேசி இருக்கோமுன்னா பாருங்களேன்.\\

பதிவர் சந்திப்பின் சிறப்பே அதுதானே...

said...

English comment. Daughters laptop/atleast no virus.super Srirangam. and Bajji too. next time shd go this mUrali kadai/ Meeting friends in Srirangam is so nice. unforgettable. thanks Thulasi ma. Roshnis works are beautiful.

said...

சுகமான நௌபவம் இல்லையா...வெங்கட்ஜி பதிவுலக நணபர்....அது போலத்தான் ஆதியும் ..அவ்வப்போது அவரது வலைத்தளம் செல்வதுண்டு...வெங்கட்ஜி ரெகுலர்...

ரோஷிணியின் கைவண்ணம் கண்டு வியக்கின்றோம்...குழந்தை வாழ்க வளமுடன்....

அருமையான ப்திவு...ஃபோட்டோக்கள் அருமை! அனுபவித்தோம்..உங்களுடன் பஜ்ஜியும், காப்பியும் ஹஹஹ

said...

திரு வை.கோபாலகிருஷ்ணன் அவரது தளத்தில் http://gopu1949.blogspot.in/2015/07/33_3.html என்ற முகவரியில் உங்களது தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். பாராட்டுக்கள்.
http://www.ponnibuddha.blogspot.com/
http://www.drbjambulingam.blogspot.com/

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

குட்டிப் பொண்ணும் படு சுட்டி. நிறைய ஓவியங்களைக் கொண்டுவந்து காண்பித்தார். எதைச் சொல்ல எதைவிட என்றாச்சு எனக்கு!

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

உண்மைதான். அவன் நினைப்பது முக்கியம். ஆனால் வரவழைச்சு,அழவும் வச்சு அனுப்புவது நியாயமான்னுதான் எனக்குக் கொஞ்சம் கோபம்:-)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

உங்க வீட்டுக்கு இது ரெண்டாவது விஸிட்.

திருப்பதி ஆசையாக இருந்தாலும் வரவர அங்கே போகவே பயமா இருக்கு!

அழைப்பு அனுப்புவான். போனதும் ரெண்டு சாத்து சாத்தியும் அனுப்புவான்:-)

அதே பெருமாளை கீழே அலமேலுமங்காபுரத்தில் நிம்மதியாக சேவிக்கலாம்.

said...

வாங்க குமார்.

அப்படிச் சொன்னதும், இடர் களையப்படும் என்பதுதான் அனுபவம்:-)

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

இப்படித்தான் ஒவ்வொரு சீஸனுக்கு ஒன்னுன்னு கைவேலைகள் கண்டுபிடிப்பு நடந்துக்கிட்டு வருது பார்த்தீங்களா? இந்த க்வில்லிங்லே சின்னப்பிள்ளைகளும் ஆர்வமா இடுபடறாங்க என்பது விசேஷம். ஆபரணக்கலை அழகுதான். அதுவும் தங்கம் விற்கும் விலையில்....

நம்ம பதிவுலகத்து மொழிகளில் சிலபல சொற்கள் விசேஷ இடம்பிடிச்சு உக்கார்ந்துருக்கு. இதில் இந்த தங்க்ஸ், ரங்கஸ் உண்டு:-) தங்கஸ் = மனைவி. ரங்க்ஸ்= கணவர். முந்தி எஸ் வி சேகரின் சினிமா ஒன்னு ரங்கமணி தங்கமணி என்ற பெயரில் வந்துச்சு பாருங்க. அதிலிருந்து ஆரம்பிச்சு, இன்னொரு படத்தில் நம்ம ஜனகராஜ்,என் தங்கமணி ஊருக்குப்போயிட்டா.....ன்னு கூவுவதில் இடம்பிடிச்சு அப்படியே பதிவுலகத்துக்கு நகர்ந்து வந்துருக்கு:-)

இன்னும் நிறைய சொற்கள் அப்பப்ப கண்டுபிடித்தலில் வருது இப்பவும். கொசுவத்தி, ககைநா என்று (கணினி கைநாட்டு ) இவை என்னோடவை. காப்பிரைட் இருக்கு:-)
சொசெசூ என்பது நம்ம வரவணையானோடது. சொந்த செலவில் சூனியம்.

said...

வாங்க செந்தில் குமார்.

நண்பர் சொன்னது உண்மையானால்..... அப்படியே இனி செய்வேன். ஆனால் வாசலில் தடுப்பு வச்சு யாரையும் உள்ளே விடாமல் கெடுபிடியால்லே இருக்கு:(

திருப்பதி தேவஸ்தானத்துக்கு எழுதிக் கேக்கலாம். ஆனால் பதில் வரணுமே!

said...

வாங்க கீத மஞ்சரி.

உண்மைதான்ப்பா. என்னமோ தினம் தினம் பார்த்துப் பேசிக்கிட்டு இருக்கும் உணர்வு வந்துருது:-)

said...

வாங்க வல்லி.

அடுத்தமுறை நாம் சேர்ந்தே முரளி கடைக்குப்போகலாம். அதுக்குள்ளே மெனுவில் வடை வந்தால் நல்லா இருக்கும்:-)

ரோஷ்ணி செல்லம் ரொம்பவே க்ளவர்ப்பா! புலிக்குப் பிறந்தவள்:-)

said...

வாங்க துளசிதரன்.

ஆஹா.... பதிவர் சந்திப்பு ரொம்பவே இனிமையான சமாச்சாரம்தான் எந்த ஊரில் என்றாலுமே!

எல்லாம் இணையம் தந்த கொடை!!!!

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.
சேதி சொன்னதுக்கு மனம்நிறைந்த நன்றிகள்.

said...

சில்லரை இல்லை சில்லறை. 25 தடவை எழுதிக் காமிங்க.

(நாட்டுல ரீச்சருக்கு இம்போசிஷன் குடுக்கிற கொடுமை இந்த கிளாசில் மட்டும்தான்!)

said...

எப்பவுமே கூட்டணி இருந்தா நல்லாருக்கும். நம்ம ஒன்னு சொல்ல.. அதுக்கொருத்தர் ஆமா சொல்ல. எவ்வளவு சொகம். அப்படித்தான் பஜ்ஜி/வடையோட காப்பி சாப்பிடுறது. அந்த பஜ்ஜி வடையும் சூடாயிருக்கனும். அந்த சூட்டுல நாக்கு லேசா பொத்துப் போன மாதிரி இருக்குறப்போ காப்பியை ஊத்தனும். அது சுகம்.

திருப்பதில உட்பிராகரமென்ன உட்பிரகாரம்... வெங்கடேசனையே சுத்தலாம். ஆனா நீங்க விவிஐபியா இருக்கனும். ரெண்டு மூனு லட்சங்களை அப்படியே விட்டெறிஞ்சால் எதுவும் நடக்கும். அங்க மட்டுமில்ல. திருச்செந்தூர்லயும் தான். திருத்தணியிலயும் தான். காசு செலவழிக்கத் தயாரா இருந்தா ஹோட்டல்லயும் கோயில்லயும் எல்லா வசதியும் கிடைக்கும்.

நானெல்லாம் இப்பல்லாம் கோயில்களுக்குப் பெருசாப் போறதில்லை. உள்ளத்துக்குள்ளயே வெச்சிக்கிட்டு வெளிய என்னத்த தேடுறதுன்னு விட்டுட்டேன். யாராவது போறாங்கன்னா கூடப் போவேன். பெரிய மெனக்கெடல்கள் இல்லை. முருகன் ஏன் இப்படியொரு மனநிலையைக் கொடுத்தான்னு தெரியல.

said...

திருப்பதி கோவிலில் இருக்கற கூட்டத்துக்கு பிராகாரம் சுத்தமுடியாது.முழு பிரதட்சணம் பண்ணமுடியாது. ஆனால் அங்கப்பிரதக்ஷணத்தின்போது பிராகாரம் சுத்த முடியும். எந்தக் கோவிலும் கோவில் தலைவன் கூப்பிட்டால்தான் போக சந்தர்ப்பம் வாய்க்கும். நீங்கள் திருப்பியும் திருவரங்கம் செல்லும் வாய்ப்பு கிடைக்கப்போகிறது.

திருவரங்கம் கோவில் பிரசாதக் கடையில் உள்ள பிரசாதம், பசிக்குத்தான். ருசிக்கு அல்ல. எல்லாமே சுமாராகத்தான் இருக்கும். காசு அதிகம் வைக்கக் கூடாது என்பதற்காகக் குவாலிட்டியில் காம்ப்ரமைஸ் பண்ணுகிறார்கள் என்று நினைக்கிறேன். எல்லாவித பக்தர்களும் வாங்கும்படியாக இருக்க வேண்டுமல்லவா?

'கோவில்ல காசு விட்டெறியறோம்' என்று சொல்வது தவறு. 'நம்ம சௌகரியத்தை நாம் பார்ப்பதால், கோவில் தக்கார் குழு, அதற்கு வசதி செய்துதருகிறது. (ரயிலில் வகுப்புகள் இருப்பது போல). நான் முன்னர், கோவிலில் அர்ச்சகர்களோ அல்லது அங்கே இருக்கும் மற்றவர்களோ, காசு எதிர்பார்ப்பதை வெறுப்பாக எண்ணியிருந்தேன். அவர்களது குழந்தைகளுக்கும் 'நம் குழந்தைகளைப்போல் எதிர்பார்ப்பு இருக்குமல்லவா?

உள்ளமே கோவில். ஊனுடம்பே ஆலயம். பதிவுகளின் மூலமாக டீச்சரிடம் தொடர்பில் இருந்தாலும், பதிவர் சந்திப்பு கொஞ்சம் விசேஷமல்லவா? ஆலயத் தரிசனம் அதனைப்போல்தான்.

said...

ப்ரசாத ஸ்டாலில் பிரசாதமே வாங்கக் கூடாது! அவை கோயிலில் செய்யப்படுவது இல்லை. :( கோயிலில் செய்யப்படும் பிரசாதங்கள் கோயில் கருவறையைச் சுற்றி உள்ள பிரகாரங்களில் பட்டாசாரியார்களாலேயே விற்கப்படும். ஒரு சிலர் காசு வேண்டாம்னு சொல்வதும் உண்டு. நாங்க வெளியே வாங்குவதே இல்லை. ஒரு முறை நம்ம ரங்க்ஸ் வடைக்கு ஆசைப்பட்டு பெருமாள் வடை வாங்க, அதைச் சாப்பிட்டுவிட்டு ஒரு வாரம் வயிற்றுத் தொந்திரவு! :( நல்லவேளையா நான் எனக்கு வேணாம்னு சொல்லிட்டேன். :) என்ன ஒரு கஷ்டம்னா பிரசாதங்கள் பட்டாசாரியார்களால் கொடுக்கும் நேரம் நமக்குத் தெரியணும். :)

said...

கமென்ட் போச்சானு தெரியலை! ஹிஹிஹி, பிரசாத ஸ்டாலில் பிரசாதங்கள் வாங்கக் கூடாது. அவை எல்லாம் வெளியே இருந்து வருபவை. திரு நெல்லைத் தமிழன் சொல்லி இருக்கிறாப்போல் சுமாராகத் தான் இருக்கும். கோயில் கருவறையைச் சுற்றி உள்ள பிரகாராங்களில் பட்டாசாரியார்களாலேயே ஒரிஜினல் பிரசாதங்கள் விற்கப்படும். இந்தப் புளியோதரை, சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம், தோசை எல்லாம் மதியம் பனிரண்டரையிலிருந்து ஒன்றரைக்குள்ளாக பட்டாசாரியார்கள் விற்றுக் கொண்டு இருப்பார்கள். பார்க்கலாம். அது தான் ஒரிஜினல் பிரசாதம். மேலும் புளியோதரைப் பிரசாதம் எனில் அதில் மிளகு மட்டுமே சேர்க்கப்பட்டிருக்கும். வெளியே உள்ளதில் மிளகாய் வற்றல் சேர்த்திருப்பார்கள். நாம் தளிகைப் பிரசாதம் கேட்டாலும் கோஷ்டியின் போது விநியோகம் பண்ணுவதற்கும், பின்னர் நமக்குக் கொடுப்பதற்கும் கட்டாயம் வித்தியாசம் இருக்கும்.ஆனால் நமக்குக் கொடுப்பதும் இங்கே பட்டாசாரியார்களாலேயே மடைப்பள்ளியில் செய்யப்படுவது என்பது ஒன்றே ஆறுதல் தரும் விஷயம். :)

said...

இந்தப் பிரசாதங்கள் பத்தி ஒரு ஆய்வே செய்திருக்கோமாக்கும்! :)

said...

சில பெருமாள் கோயில்களில் நேரே மடைப்பள்ளிக்குப் போய்ப் பிரசாதம் வாங்கிக்கலாம்.

said...

வாங்க கொத்ஸ்.

காரணம் நீங்களேதான். இதுக்குத்தான் அந்த புத்தகத்தை அனுப்புங்கன்னு சொன்னேன். அதான் அந்த இலக்கணம் சொல்லித்தருமே அது! நாமே வாங்கிக்கலாமுன்னு நியூ புக் லேண்டில் கேட்டால்..... அவுங்களுக்குக் கிழக்கு சப்ளை இல்லையாமே!

பதிவுலக சீத்தலை சாத்தனாரா இருந்தால் இப்படித்தான். (ஹெல்மெட் போட்டால் வலிக்கும்!)

சில்லறை X 25.

said...

வாங்க ஜிரா.

எதுக்கு இப்படி ரெண்டு மூணு லட்சம்? திருச்செந்தூரில் வெறும் 101 ரூ டிக்கெட்டுக்கே முருகனுக்கும் நமக்கும் எட்டடிதானே இருந்துச்சு.

திருப்பதியில் சும்மா பிரகாரம் சுத்த முடியாதாமே:( நெல்லைத்தமிழன் சொல்றாரு பாருங்க!

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

//'கோவில்ல காசு விட்டெறியறோம்'// ஐயோ இப்படி யார் சொன்னது? நம்மைத்தான் கை பிடிச்சு இழுத்து விட்டெறியறாங்க அங்கே:(

மத்தபடி பிரஸாதம் பற்றி நீங்க சொன்னதைத்தான் கீதாம்மாவும் சொல்றாங்க பாருங்க.

மறுபடியும் ஸ்ரீரங்கமா? ஹயக்ரீவாவில் தங்கறதுக்குப் போய்த்தான் ஆகணும்:-) ஒரு வாரம் வேணுமுன்னு இப்ப இருந்தே உருவேத்திக்கிட்டு இருக்கேன். ரெங்கன் பார்த்துக்கணும்.

said...

வாங்க கீதா.

நாலுக்கு நன்றி.

கோவிலுக்கு நீங்க சொல்லும் நேரத்தில் இதுவரை போனதில்லையேப்பா. அடுத்த பயணத்தில் ஒரிஜினல் ப்ரஸாதத்தை விடுவதில்லை. ரெங்கனிடம் சொல்லி வச்சுருக்கேன்.

பொதுவா கோவில்களில் பிரஸாதங்கள் வாங்குவதில்லை. அண்ணன் கூடப்போனால் தில்லக்கேணியில் கட்டாயம் வாங்கித்தருவார். ஸ்ரீரங்கத்தில் கூட இதுதான் முதல்முறை! மனசுலே குளிர் விட்டுப் போயிருக்கு இப்ப. க்ருஷ்ணார்ப்பணம்:-)

said...

எங்கள் வீட்டு வருகை... நானே லேட்...:))) நிறைவா எழுதியிருக்கீங்க டீச்சர்.

அன்றைய சந்திப்பு மிகவும் இனிமையாக இருந்தது டீச்சர். நேரம் போனதே தெரியலை.. ஆனா என்னுடைய சமையல்ல இருந்து தப்பிச்சிக்கிட்டே இருக்கீங்க என்று தான் சொல்லணும்....:)))